தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் முக்கியப் பாடங்களில் 100% மதிப்பெண் பெற்ற மாணாக்கரின் எண்ணிக்கை தொடர்பான விவரமும் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழ் மொழிப் பாடத்தில் 35 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 7 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6996 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக வணிகவியலில் 6142 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 2587 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறாக ஏதோ ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை – 26,352 ஆக உள்ளது.
பாடவாரியாக முழு மதிப்பெண்:
- தமிழ் 35
- ஆங்கிலம், 7
- இயற்பியல் 633
4 வேதியியல் 471 - உயிரியல் 652
- கணிதம் 2587
- தாவரவியில் 90
- விலங்கியல் 382
- கணினி அறிவியல் 6996
- வணிகவியல் 6142
- கணக்குப் பதிவியல் 1647
- பொருளியல் 3299
- கணக்குப் பயன்பாடுகள் 2251
- வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 210
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இத்தேர்வில், மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.