.”என்னைப் போல ராகுலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏமாற்ற மாட்டார்”: சோனியா காந்தி பேச்சு

”என் மகன் ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டது போல் நீங்கள் அவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்” என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா பேசினார்.உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் இண்டியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுல், அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில், ”கடந்த 10 ஆண்டுகளாக, நாட்டின் சாமானியர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த நாடு தனது குரலைக் கேட்க விரும்புகிறது. ஆனால் நரேந்திர மோடியின் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் என்ற புயல் வீசுகிறது,” என்றார்.எங்கள் குடும்பத்தின் வேர்கள் இந்த மண்ணின் மண்ணோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவு, கங்கை…

தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது-பிரதமர் மோடி கடும் தாக்கு

தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது-பிரதமர் மோடி கடும் தாக்கு ம்பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உங்களை எச்சரிக்க இன்று நான் இங்கே வந்துள்ளேன். அவர்கள் உங்களுடைய வாக்கை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்களுக்காக வாக்கு ஜிஹாத் செய்பவர்களுக்கு பரிசுகளை பகிர்ந்து அளிப்பார்கள். இந்தமுறை தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொருவரின் சொத்துகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக சொல்லிக்கொண்டு வருகிறது. பின்னர் அவர்கள் உங்களுடைய சொத்துகளின் ஒரு பகுதியை, அவர்களுடைய வாக்கு வங்கியான, அவர்களுக்காக “வாக்கு ஜிஹாத்”…

மனித மூளையில் சிப் பொருத்திக் கொள்ள- விண்ணப்பங்களை வரவேற்கும் நியூராலிங்க்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும். முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி…

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் மழைவாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் பழுது

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் வாக்குகள், 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு, அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டுள்ளன.வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறை உள்ளேயும், வெளியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழு தொகுதிகளின் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 300 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்டுள்ளது.இன்று காலை இடி மின்னலுடன் பெய்த மழையால் 7.30 மணிக்கு வெளியே பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ஏழு சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதானது.…

தனியார் இடத்தில் கோவில் கட்டி ஆஞ்சநேயரை மனுதாரராக சேர்த்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில் , கடவுள் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டில்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.டில்லி உத்தம் நகர் பகுதியில்,தனியார் நிலத்தில் கோவில் கட்டப்பட்டது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்த அங்கித் மிஸ்ரா என்பவர், அந்த சொத்தில் உள்ள கோவில் பொது மக்களுக்கு சொந்தமானது என்பதால், இந்த நிலம் கடவுள் ஆஞ்சநேயருக்கு சொந்தமானது எனக்கூறி, ஆஞ்சநேயரையும் ஒரு மனுதாரராக சேர்த்து இருந்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் இந்த செயல், சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்யக் கூடியது. மோசமான மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறை எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கோவிட் தடுப்பூசி திரும்ப பெறுகிறோம் ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், உலக அளவில் தங்களுடைய கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. கோவிட் பரவலின் போது ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்தது. ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம் நம் நாட்டில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வகையில் 51 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. ரூ.1,047 கோடி இழப்பீடு வழங்க மனுதாரர்கள் கோரி உள்ளனர். இந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் அளித்த வாக்குமூலத்தில், தாங்கள் தயாரித்த தடுப்பூசி மருந்தால் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்பு…

தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல் உள்ளனர் காங்கிரஸ் சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போலும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை போலும், மேற்கு இந்தியர்கள் அரேபியர்கள் போல் உள்ளனர் என்று கூறி புது சச்சரவை துவக்கி வைத்துள்ளார். இது போன்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் கூறியுள்ளது.இந்நிலையில் சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சை ஆகி…

மத்தியபிரதேசத்தில் வாக்கு பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்து தீ பிடித்து 4 வாக்குபதிவு இயந்திரங்கள் சேதம்

மத்தியபிரேதேச மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்தது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.நாடு முழுவதும் 94 தொகுதிகளில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நேற்று நடந்தது.மத்தியபிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. பிறகு வாக்கு பதிவு இயந்திரங்களை, வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.பீட்டுல் மாவட்டத்தின் கோலா கிராமத்தில் பேருந்து மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். பேருந்தில் 6 வாக்கு இயந்திரங்கள் இருந்தன. வழியில் இரவு 11 மணியளவில், அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தீவிபத்து ஏற்பட்டதும் கதவுகள் அனைத்தும் சிக்கிக் கொண்டன. இதனால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அனைவரும் வெளியே தப்பி ஓடிவந்தனர். யாருக்கும் எந்தவித காயங்களும்,…

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் வருகிற 13-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கம்

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் வருகிற 13-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது இந்தியா – இலங்கை இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட கப்பல் சேவையை துவக்க, நாகப்பட்டினத்தில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் காங்கேசன் துறைமுகத்திற்கு, சிறிய பயணியர் கப்பல்களை இயக்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான, 150 பயணியர் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்ட, ‘சிரியா பாணி’ என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு அக்., 14ல் இயக்கப்பட்டது. கடலின் பருவ மாற்றத்தால் சில தினங்களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இந்நிலையில், தனியார் வசம் கப்பல் போக்குவரத்து சேவை ஒப்படைக்கப்பட்டு, வரும் 13 முதல், இலங்கைக்கு மீண்டும் பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. இது குறித்து தனியார் கப்பல் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் நிரஞ்சன்…

காக்கிநாடாவில் ரூ. 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் வருகின்ற 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும்படையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரத்தில் இன்று அதிகாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில், இரும்புப் பெட்டியில் தங்கக் கட்டிகள் இருந்தது அம்பலமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.17 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பித்தாபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு வாகனம் மற்றும் தங்கக் கட்டிகளை எடுத்துச்…