3 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்த திருடன் மீண்டும் திருட்டில் ஈடுபட்ட போது சிக்கினார்.

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை அருகே உள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 16 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வெளியே சென்றார். பின்னர், மாலை வீடு திரும்பியவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் கதவு திறந்து கிடந்தது. அதிலிருந்த, ரூ.10 லட்சம் மதிப்பிலான 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15,000  ரொக்கம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். விசாரணையில் சந்தேகப்படும் படியாக நடந்து சென்ற நபரின் புகைப்படத்தை கைப்பற்றிய போலீசார், அந்த நபர் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்காததால், தமிழ்நாடு போலீசாரின் உதவியை அவர்கள் நாடினர். இமெயில் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படத்தை பார்த்ததும், தமிழ்நாட்டு…