ஆக்கிரமிப்பு கோவில் அகற்றம்கரையாம்புத்துார் அடுத்த மணமேடுபகுதியில் பொதுமக்கள் அதிகாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்துார் அருகே உள்ள மணமேடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கலையரங்கம், அங்கன்வாடி மையம், கழிப்பறை உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும், அங்குள்ள காலி இடத்தை, அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், அங்கு ஒரு முருகர் சிலை வைத்து கொட்டகை கட்டி கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இதற்கு, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மேலும் சிலர் அங்கு வீடுகள் கட்டி ஆக்கிரமித்தனர்.

இதனால், அங்கு விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இது தொடர்பாக, அப்பகுதி மக்களிடையே பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகனது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வருவாய் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், சப் கலெக்டர் சோம சேகர் அப்பராவ் கொட்டாரு நேற்று மணமேடு கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிட்டார்.

இதையடுத்து, பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ண தலைமையில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், போலீசார் பாதுகாப்புடன் மணமேடு கிராமத்தில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட கோவில் மற்றும் கொட்டகையை ஜே.சி.பி., இயந்திரமாக மூலமாக அப்புறப்படுத்தினர். இதையறிந்த அப்பகுதி மக்கள் சிலர் கோவில் அகற்றிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிட வேண்டும் என தாசில்தார் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

Leave a Comment