பொங்கல் தொகுப்புக்கு பதில் ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரொக்கப் பணம் ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டத. இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை தமிழ்ச்சங்கம் சார்பில்திமுக முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுகரசுக்கு பாரதி பொற்பதக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ந. ரங்கசாமி வழங்கி சிறப்புரை ! புதுவை தமிழ்ச்சங்கத்தில் மகாகவி பாரதி விழா மற்றும் பாரதி பொற்பதக்கம் வழங்கும் விழா நேற்று மாலை தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்ச்சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை வகித்தார். செயலாளர் சீனு. மோகன்தாசு வரவேற்று பேசினார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணைச் செயலர் தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி புலவர் உசேன், கலைமாமணி எம்.எஸ். ராஜா, பொறிஞர் மு. சுரேசுகுமார், பாவலர் அ. சிவேந்திரன், பாவலர் ர. ஆனந்தராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கோவிந்தராசு தலைமையில் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற தலைப்பில் பாவரங்கம் நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும்,…

உச்சநீதிமன்ற உத்தரவின்படிபுதுச்சேரியில் ஜன.12 ஆம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயம்- அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் ஜன. 12ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், டி.ஜி.பி, ஷாலினி சிங் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் மற்றும் 500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வருபவர்களுக்கு 10 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் இரவு 12:30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி கவர்னர் தலைமையில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.ஜனவரி 12…

நாடு முழுதும் ரூ.66.11 கோடி மோசடி வடநாட்டை சோ்ந்த 3 பேர் கைது புதுச்சேரி இணையவழி போலீசார் அதிரடிநடவடிக்கை

இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் ரூ. 66.11 கோடி மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகம்மை; டாக்டர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரிடம் கடந்த ஜூன் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, ஆன்லைன் மோசடி கும்பல் போன் செய்தது. அவர்கள் அழகம்மையின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி, மிரட்டி, அவரிடம் இருந்து 27 லட்சம் ரூபாயை பறித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணையை துவக்கினர். இதில் டாக்டர் அழகம்மை வங்கி கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யாருடையது? என, ஆய்வு செய்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில்…

அம்பேத்கரை அவமதித்தஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக–வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமாமேதை, டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று காலை 11.30 மணியளவில் கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை வகித்தார். அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை கையிள் ஏந்தி அவரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன்,…

ரூ.17.58 கோடியில் அண்ணா விளையாட்டரங்கு கட்டுமான பணி முதல்வர் ரங்கசாமி திடீர் ஆய்வு

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அண்ணா திடலில், ரூ. 9.66 கோடி மதிப்பீட்டில், சிறு விளையாட்டரங்கம் மற்றும் இந்த திடலை சுற்றி 179 கடைகள் இயங்கிவந்தன. எனவே அவர்களுக்கு நகராட்சி கடைகள் கட்டும் பணியும் கடந்த 2021ம் ஆண்டு துவங்கியது. அப்போதைய முதல்வர் நாராயணசாமி இதனை தொடங்கிவைத்தார். ஸ்மார்ட் சிட்டி மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே சமூகமான உறவு இல்லாததால் கட்டுமான பணி இழுப்பறியாக இருந்தது. அண்ணாதிடலில் 14 ஆயிரத்து 435 சதுரமீட்டர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் கட்ட முடிவுசெய்யப்பட்டது. இதில் வீரா்கள் தங்குமிடம் கால்பந்து திடல்,டென்னீஸ்கோர்ட் உடற்பயிற்சிகூடம் பெத்தாங்கோர்ட் பார்வையாளர்கள் அமர்ந்து வகையில் கேலரிகள் அைமகிறது. ேமலும் இதை சுற்றி 179 கடைகளும் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், விளையாட்டரங்கம் கட்டும் பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று ஆய்வு செய்தார்.பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், ஸ்மார்ட் சிட்டி…

உச்ச நீதிமன்ற நீதிபதி உடன் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் சந்திப்பு

உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவனை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து நேரில் சந்தித்து புதுவைத் தமிழ்ச் நிகழ்ச்சிக்கு வருகை தர வேண்டி அழைப்பு விடுத்தார். உடன்பொருளாளர் . அருள் செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, சுந்தர முருகன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் உள்ளனர்.

வதந்தி பரப்பியவர்கள் வீடியோ

நேற்று 12.12.24 புதுச்சேரி அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காததற்கு முன்பே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று பொய்யான செய்தியை WhatsApp மூலம் இணையதளத்தில் பரப்பிய ஆட்டோ ஓட்டுநர்களான புதுச்சேரி சின்னையாபுரத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜ் மற்றும் கலைவாணன் ஆகியோர்கள் பொதுமக்களிடம் தங்களின் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்ட வீடியோ பதிவு.

நிவாரணத் தொகையை பத்தாயிரம் ஆக உயர்த்து வழங்க வேண்டும்காங்கிரஸ் கோரிக்கை

. நிவாரணத் தொகையை பத்தாயிரம் ஆக உயர்த்து வழங்க வேண்டும்காங்கிரஸ் கோரிக்கை. புதுச்சேரி. டிச.12-புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்பியும் ஆன வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வைத்தியநாதன் எம் எல் ஏ காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் கவர்னர் கைலாசநாதனை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர் அதில் கூறியிருப்பதாவது பெண்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள் மீண்டும் கிடைத்திட சிறப்பு முகாம் நடத்த வேண்டும் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் வெள்ளத்தால் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் மீனவர்களுக்கான இழப்பு தொகையை 20 ஆயிரம் ஆகும் ஹெக்டர் பயிரிழப்புக்கு ரூபாய் 50,000 ஆகவும் கால்நடைகள் இழப்பீட்டுத்…

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்

முன்னாள் முதல்வர் உடல் எரியூட்டப்பட்டதுமுதல்வர் அமைச்சர்கள் திமுக காங்க காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலிபுதுச்சேரி டிசம்பர் 10 புதுச்சேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ராமச்சந்திரனின் உடல் 21 குண்டுகள் வழங்க முழு அரசு மரியாதை உடன் நேற்று தகரம் செய்யப்பட்டதுபுதுச்சேரி முன்னாள் முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரன் 93 வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார் திமுக அதிமுக காங்கிரஸ் கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்து வந்தார் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் திமுக காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் மேலும்…