இந்தியாவில் வேலைக்கு ஆளெடுக்கும் டெஸ்லா..பணிகள் தொடங்கியது

இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் ‘லிங்க்ட் இன்’ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய…

சிங்கார வேலர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி சபாநாயா மாலையணிவிப்பு

சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது புதுச்சேரி, கடலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன் சட்டமன்ற தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார்,காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன்,திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கட்சி தலைவர் சிவா,முன்னாள் அமைச்சர் எஸ்,பி,சிவகுமார்,…

லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி இணையவழியில் ரூ.3 லட்சம் பண மோசடி

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் இணையதள லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்தவா் உமாகாந்தன்.இவா், முகநூல் பக்கத்தை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளாா். அப்போது, லாட்டரி சீட்டு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதன் விவரத்தை அவா் பாா்த்த நிலையில், அவரை மா்ம நபா் கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். தன்னை லாட்டரி முகவராக அறிமுகப்படுத்திக் கொண்ட அவா், இணையதளம் வாயிலாக உமாகாந்தன் வாங்கிய லாட்டரிக்கு ரூ.8 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளாா். பரிசைப் பெறுவதற்கு ரூ.3 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றாராம். இதை நம்பிய உமாகாந்தன் ரூ.3.06 லட்சத்தை மா்ம நபா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். அதன்பிறகு மா்ம நபா் இணைப்பைத் துண்டித்துவிட்டாா். இதனால், அதிா்ச்சியடைந்த உமாகாந்தன் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து…

புதுச்சேரியில் பயங்கரம்உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: இருவா் கைது

புதுச்சேரி அருகே உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50), வணிகா் சங்கப் பிரமுகா். திருபுவனை மேம்பாலம் அருகே உணவகம் நடத்தி வருகிறாா். உணவகம் சனிக்கிழமை அடைக்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரிய வந்தது. இதில் உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், திருவெண்டாா்கோவில் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரான காந்தியின் மகன் சபரிவாசன் (எ) சரவணப்பிரியன் (23), அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (19) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்து உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா்…

பொங்கல் தொகுப்புக்கு பதில் ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரொக்கப் பணம் ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டத. இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை தமிழ்ச்சங்கம் சார்பில்திமுக முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுகரசுக்கு பாரதி பொற்பதக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ந. ரங்கசாமி வழங்கி சிறப்புரை ! புதுவை தமிழ்ச்சங்கத்தில் மகாகவி பாரதி விழா மற்றும் பாரதி பொற்பதக்கம் வழங்கும் விழா நேற்று மாலை தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்ச்சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை வகித்தார். செயலாளர் சீனு. மோகன்தாசு வரவேற்று பேசினார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணைச் செயலர் தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி புலவர் உசேன், கலைமாமணி எம்.எஸ். ராஜா, பொறிஞர் மு. சுரேசுகுமார், பாவலர் அ. சிவேந்திரன், பாவலர் ர. ஆனந்தராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கோவிந்தராசு தலைமையில் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற தலைப்பில் பாவரங்கம் நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும்,…

உச்சநீதிமன்ற உத்தரவின்படிபுதுச்சேரியில் ஜன.12 ஆம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயம்- அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் ஜன. 12ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், டி.ஜி.பி, ஷாலினி சிங் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் மற்றும் 500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வருபவர்களுக்கு 10 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் இரவு 12:30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி கவர்னர் தலைமையில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.ஜனவரி 12…

நாடு முழுதும் ரூ.66.11 கோடி மோசடி வடநாட்டை சோ்ந்த 3 பேர் கைது புதுச்சேரி இணையவழி போலீசார் அதிரடிநடவடிக்கை

இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் ரூ. 66.11 கோடி மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகம்மை; டாக்டர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரிடம் கடந்த ஜூன் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, ஆன்லைன் மோசடி கும்பல் போன் செய்தது. அவர்கள் அழகம்மையின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி, மிரட்டி, அவரிடம் இருந்து 27 லட்சம் ரூபாயை பறித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணையை துவக்கினர். இதில் டாக்டர் அழகம்மை வங்கி கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யாருடையது? என, ஆய்வு செய்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில்…

அம்பேத்கரை அவமதித்தஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக–வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமாமேதை, டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று காலை 11.30 மணியளவில் கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை வகித்தார். அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை கையிள் ஏந்தி அவரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன்,…

ரூ.17.58 கோடியில் அண்ணா விளையாட்டரங்கு கட்டுமான பணி முதல்வர் ரங்கசாமி திடீர் ஆய்வு

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அண்ணா திடலில், ரூ. 9.66 கோடி மதிப்பீட்டில், சிறு விளையாட்டரங்கம் மற்றும் இந்த திடலை சுற்றி 179 கடைகள் இயங்கிவந்தன. எனவே அவர்களுக்கு நகராட்சி கடைகள் கட்டும் பணியும் கடந்த 2021ம் ஆண்டு துவங்கியது. அப்போதைய முதல்வர் நாராயணசாமி இதனை தொடங்கிவைத்தார். ஸ்மார்ட் சிட்டி மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே சமூகமான உறவு இல்லாததால் கட்டுமான பணி இழுப்பறியாக இருந்தது. அண்ணாதிடலில் 14 ஆயிரத்து 435 சதுரமீட்டர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் கட்ட முடிவுசெய்யப்பட்டது. இதில் வீரா்கள் தங்குமிடம் கால்பந்து திடல்,டென்னீஸ்கோர்ட் உடற்பயிற்சிகூடம் பெத்தாங்கோர்ட் பார்வையாளர்கள் அமர்ந்து வகையில் கேலரிகள் அைமகிறது. ேமலும் இதை சுற்றி 179 கடைகளும் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், விளையாட்டரங்கம் கட்டும் பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று ஆய்வு செய்தார்.பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், ஸ்மார்ட் சிட்டி…