திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் இல்லை: விஜய் திட்டவட்டம்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:- மத்திய அரசு அளவில் மலிவான அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களுடைய இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. சமூக நீதியும், நல்லிணக்கமும், சகோரத்துவமும், சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண். எனவே இங்கே தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ தமிழ்நாட்டில் உள்ள மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதனால் பாஜகவால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது. சுயநல அரசியல் லாபங்களுக்காக கூடி குலைந்து கூட்டணி போக தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவோ, திமுகவோ இல்லை. கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி – முதலமைச்சர் திறந்து வைத்தார்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் கோவில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின்கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக் காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளர் குடியிருப்பு ஆகிய திருப்பணிகளின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28.9.2022 அன்று தொடங்கி வைத்தார். அத்திருப்பணிகளில் 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவை கடந்த 14.10.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

பாதுகாப்பு உபகரணங்கள் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) மற்றும் தேசிய தூய்மை தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSKFDC) இணைந்து தொடங்கியுள்ள தேசிய இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் நடவடிக்கை (NAMASTE) திட்டம், கழிவு நீர் மற்றும் செப்டிக் டேங்க் தூய்மை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுவை மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 243 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kits) முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். சபாநாயகர் செல்வம், உள்ளாட்சி துறை இயக்குநர் சாக்திவேல், துணை இயக்குநர் சவுந்திரராஜன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பா.ம.க. கொறடா- சட்டப்பேரவை செயலாளருக்கு ராமதாஸ் தரப்பினர் கடிதம்

பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.…

இமாச்சல பிரதேச பருவமழை: 69 பேர் பலி

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்த நிலையில், 37 பேரை காணவில்லை. 110 பேர் காயம் அடைந்துள்ளனர். 700 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார். ஏற்கனவே மழையால் தத்தளித்து வரும் நிலையில், வருகிற 7ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மண்டியில் உள்ள துனாக், பக்சயேத் ஆகியப் பகுதிகள் மிகப்பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளன. பருவமழை தொடங்கியதில் இருந்து 14 மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின்சார வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் அரசு நிற்பதாக சுகு உறுதி அளித்துள்ளார். மேலும், பாதிகப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடத்திற்கு வாடகையாக 5 ஆயிரம் வழங்கப்படும்.…

10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சென்னையில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதியில்தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, இன்றுடன் 10 நிறைவு பெற்றதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2015-ல் முதற்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே தொடங்கப்பட்ட மெட்ரோ சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது இரண்டாம் கட்டப் பணியும் நடைபெற்று வருகிறது. ரூ. 63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்டப் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இந்த நிலையில், ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்புகையில், தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 8 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், விசாரணைக்காக தமிழக மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு,

தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து ,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

புதுச்சேரி பாஜக தலைவர் தேர்வு

பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ராமலிங்கம். தலைவர் பதவிக்கு ராமலிங்கத்தை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ராமலிங்கம்.

பழுதடைந்து நின்ற முதல்வரின் வாகனம்

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் 19 வாகனங்கள் டீசலில் தண்ணீர் கலந்ததால் பழுதடைந்து சாலையில் சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பம்பில் இருந்து டீசல் நிரப்பப்பட்ட பிறகு வாகனங்கள் பழுதடைந்தன. கான்வாயின் பல வாகனங்கள் பாதி வழியில் சாலையில் பழுதடைந்து நின்றன. ரட்லாவில் நடைபெற்ற பிராந்திய தொழில் திறன் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்க மோகன் யாதவ் நேற்று சென்றிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டது. முதல்வர் கான்வாயில் உள்ள ஒரு வாகனத்தின் ஓட்டுநர், இந்தூரில் இருந்து முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் டீசலில் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தாசில்தார் ஆஷிஷ் உபாத்யாய் தெரிவித்தார். இதையடுத்து சம்மந்தப்பட்ட பெட்ரோல் பம்ப் இழுத்து மூடப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக…