மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ‘பாரத்போல்’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உருவாக்கிய போர்ட்டலின் மிக முக்கியமான அம்சம் மத்திய, மாநில ஏஜென்சிகள் இன்டர்போலுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் விசாரணைகளை விரைவுபடுத்தவும் அனுமதிக்கும்,” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஒரு குற்றம் செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பியோடியவர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகளாவிய சவால்களை நாம் கண்காணித்து நமது உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்க வேண்டும். பாரத்போல் அந்தத் திசையில் ஒரு படியாகும்” என்று கூறினார்.…
Category: முதன்மை செய்திகள்
முதலமைச்சர், கவர்னர் குறித்து வரம்பு மீறி டுவிட் செய்துள்ளார்.தமிழிசை சவுந்தரராஜன்
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மறைக்கவே போராட்டம் நடத்துகின்றனர்- தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்க சொன்னால், கவர்னர் பிரிவினை வாதம் பேசுவதாக தி.மு.க.வினர் சொல்கிறார்கள். கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. போராட்டம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்களது ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லையா? கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டம்…
ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!
ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆளுநர் பரிந்துரைப்பவரே தலைவராகவும், யுஜிசி பரிந்துரைப்பவர் உறுப்பினராகவும் இருப்பார்கள், பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரே மற்றொரு உறுப்பினராக இருப்பார், இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ள யுஜிசி-க்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பல்கலைக்கழக வேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது உள்ளிட்ட புதிய யுஜிசி விதிமுறைகள், கூட்டாட்சி மற்றும் மாநில…
பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ்
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி பதிவுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பானி பூரி விற்பனையாளர் 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார். ஆன்லைன் பேமெண்ட் (RazorPay, PhonePe) மூலம் பானி பூரி விற்பனையாளரின் பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வங்கிகள் மட்டுமின்றி யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். அதன்படி இந்த பானி பூரி வியாபாரியை கண்டறிந்து அனுப்பட்டுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நோட்டீஸில், பிரிவு 70-இன் கீழ் பானி பூரி விற்பனையாளரை நேரில் வந்து ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் வரம்பை தாண்டிய பிறகு ஜிஎஸ்டி…
ஆவடி சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதி. இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தது குறித்து செய்திகள் வெளியாகின. அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சிறுமி டான்யாவின் வீட்டுக்கு சென்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இதில் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைகளும் வெற்றி பெற்றது. இதை…
அரசியலமைப்பு குற்றத்தில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது- காங்கிரஸ் தலைவர் கார்கே
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்கு மன்னிப்பு கேட்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்திருந்தார். அனைத்து சமூதாயத்தினரும் அமைதி காக்க வேண்டும். மன்னிப்போம், மறப்போம் எனக் கூறியிருந்தார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்ட ஓரிரு நாளிலேயே புதிய வன்முறை வெடித்தது. நேற்று மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை ஒரு கும்பல் தாக்கியது. இந்த திடீர் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இம்பால் கிழக்கு மாவட்ட எல்லையான சைபோல் கிராமத்தில் இருந்து பி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். படையை அகற்றத் தவறியதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிப்பூர் தீப்பற்றி எரிவதற்கான குற்றத்தில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் கார்கே வெளியிட்டுளள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க.…
பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடர்- தமிழக அரசு அறிவிப்பு
வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களுக்கு 2 ஆயிரம் வழங்கப்பட்டது. புயலால் பாதிப்பு சீரமைப்புக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 6 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் சாய்நாத் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது பட்டாசு ஆலையில் வெடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அருகில் இருந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் தீ பரவி பயங்கரமாக வெடித்தது. வெடி விபத்தின் சத்தம் சில கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது. இந்த விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ்,…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர். இதனையத்து நாளை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 12-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13-ந் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும்,…
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின் மாற்று சாவியை பயன்படுத்தி திமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு, சிஆர்பிஎஃப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளில் இன்று காலை 7 மணியளவில் சோதனை மேற்கொண்டனர். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில்…