இந்தியாவில் வேலைக்கு ஆளெடுக்கும் டெஸ்லா..பணிகள் தொடங்கியது

இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் ‘லிங்க்ட் இன்’ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய…

சிங்கார வேலர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி சபாநாயா மாலையணிவிப்பு

சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது புதுச்சேரி, கடலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன் சட்டமன்ற தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார்,காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன்,திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கட்சி தலைவர் சிவா,முன்னாள் அமைச்சர் எஸ்,பி,சிவகுமார்,…

லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி இணையவழியில் ரூ.3 லட்சம் பண மோசடி

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் இணையதள லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்தவா் உமாகாந்தன்.இவா், முகநூல் பக்கத்தை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளாா். அப்போது, லாட்டரி சீட்டு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதன் விவரத்தை அவா் பாா்த்த நிலையில், அவரை மா்ம நபா் கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். தன்னை லாட்டரி முகவராக அறிமுகப்படுத்திக் கொண்ட அவா், இணையதளம் வாயிலாக உமாகாந்தன் வாங்கிய லாட்டரிக்கு ரூ.8 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளாா். பரிசைப் பெறுவதற்கு ரூ.3 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றாராம். இதை நம்பிய உமாகாந்தன் ரூ.3.06 லட்சத்தை மா்ம நபா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். அதன்பிறகு மா்ம நபா் இணைப்பைத் துண்டித்துவிட்டாா். இதனால், அதிா்ச்சியடைந்த உமாகாந்தன் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து…

புதுச்சேரியில் பயங்கரம்உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: இருவா் கைது

புதுச்சேரி அருகே உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50), வணிகா் சங்கப் பிரமுகா். திருபுவனை மேம்பாலம் அருகே உணவகம் நடத்தி வருகிறாா். உணவகம் சனிக்கிழமை அடைக்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரிய வந்தது. இதில் உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், திருவெண்டாா்கோவில் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரான காந்தியின் மகன் சபரிவாசன் (எ) சரவணப்பிரியன் (23), அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (19) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்து உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா்…

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யமுடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த…

குற்றவாளிகளை பிடிக்க அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது – அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ‘பாரத்போல்’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உருவாக்கிய போர்ட்டலின் மிக முக்கியமான அம்சம் மத்திய, மாநில ஏஜென்சிகள் இன்டர்போலுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் விசாரணைகளை விரைவுபடுத்தவும் அனுமதிக்கும்,” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஒரு குற்றம் செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பியோடியவர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகளாவிய சவால்களை நாம் கண்காணித்து நமது உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்க வேண்டும். பாரத்போல் அந்தத் திசையில் ஒரு படியாகும்” என்று கூறினார்.…

முதலமைச்சர், கவர்னர் குறித்து வரம்பு மீறி டுவிட் செய்துள்ளார்.தமிழிசை சவுந்தரராஜன்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மறைக்கவே போராட்டம் நடத்துகின்றனர்- தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்க சொன்னால், கவர்னர் பிரிவினை வாதம் பேசுவதாக தி.மு.க.வினர் சொல்கிறார்கள். கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. போராட்டம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்களது ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லையா? கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டம்…

ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆளுநர் பரிந்துரைப்பவரே தலைவராகவும், யுஜிசி பரிந்துரைப்பவர் உறுப்பினராகவும் இருப்பார்கள், பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரே மற்றொரு உறுப்பினராக இருப்பார், இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ள யுஜிசி-க்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பல்கலைக்கழக வேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது உள்ளிட்ட புதிய யுஜிசி விதிமுறைகள், கூட்டாட்சி மற்றும் மாநில…

பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ்

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி பதிவுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பானி பூரி விற்பனையாளர் 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார். ஆன்லைன் பேமெண்ட் (RazorPay, PhonePe) மூலம் பானி பூரி விற்பனையாளரின் பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வங்கிகள் மட்டுமின்றி யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். அதன்படி இந்த பானி பூரி வியாபாரியை கண்டறிந்து அனுப்பட்டுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நோட்டீஸில், பிரிவு 70-இன் கீழ் பானி பூரி விற்பனையாளரை நேரில் வந்து ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் வரம்பை தாண்டிய பிறகு ஜிஎஸ்டி…

ஆவடி சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதி. இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தது குறித்து செய்திகள் வெளியாகின. அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சிறுமி டான்யாவின் வீட்டுக்கு சென்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இதில் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைகளும் வெற்றி பெற்றது. இதை…