கீழ் வேளூரைச் சேர்ந்தவர் சரனிதா (32). இவர் கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் எம்டி முடித்து விட்டு, ஒரு மாத பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். சென்னை அயனாவரத்தில் விடுதியில் தங்கியிருந்தபடியே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சென்று பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் தன் மனைவி சரனிதாவிடம் பேசுவதற்காக இன்று காலை அவரது கணவர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது நீண்டநேரமாக சரனிதா செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து சரனிதாவின் கணவர், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்துக்கு போன் செய்து சரனிதாவின் அறைக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
விடுதி நிர்வாகத்தினர் சரனிதாவின் அறைக்கு சென்று பார்த்தபோது, லேப்-டாப் சார்ஜ் ஒயரைக் கையில் பிடித்தப்படியே சரனிதா மின்சாரம் தாக்கி இறந்து கீழே விழுந்து கிடந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து, காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சரனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.