சேலம் எடப்பாடியில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
- நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரசும் தான்.
- நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே அதை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுகிறது.
- மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
- ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
- திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம் என்று கூறினார்.