ஏஐ தொழில்நுட்பத்தில் திரைப்படத்தில்விஜயகாந்த் பயன்படுத்து கூடாதுதேமுதிக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.

எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

One Thought to “ஏஐ தொழில்நுட்பத்தில் திரைப்படத்தில்விஜயகாந்த் பயன்படுத்து கூடாதுதேமுதிக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு”

  1. I’m not sure where you’re getting your information, but good topic.

    I needs to spend some time learning more or understanding more.
    Thanks for wonderful information I was looking for this information for my mission.

Leave a Comment