தமிழக முதல்வர் எக்ஸ் பக்கத்தில் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் மே தினத்தில் இல் வாழ்த்திப் போற்றுவோம்!
மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க – ஒற்றுமையை உண்டாக்க ! மே நாளில் உறுதியேற்போம் உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.