புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 134-ஆம் பிறந்தநாள் விழா. உலகத் தமிழ்மொழி நாள் – உலகத் தமிழ்க் கவிஞர் நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகள் அரபுமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
புதுவை தமிழ் சங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதிதாசனின் பேரன் பாரதி தலைமை தாங்கினார்.பாவலா் இராஸ்ரீமகேஷ் வரவேற்றாா்.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத் தலைமை நீதிபதி த.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு , அரபு மொழியில் மொழி பெயா்க்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள் நூலின் முதல் படியை வெளியிட்டாா். அதனை, புதுச்சேரி அரபிக் ஆய்வு மைய நிறுவனா் சையது நிஜாமிஷாஹ் நூரி பெற்றுக் கொண்டாா். விழாவில் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவா் வி. முத்து பாராட்டிப் பேசினாா். மதுரை அரபிக் கல்லூரி முதல்வா் முஹம்மத் முஸ்தஃபா நூலின் சிறப்பினை எடுத்துரைத்தாா். நூலாசிரியா் ஜாகிா் ஹூசைன் ஏற்புரையாற்றினாா். விழாவில் அறக்கட்டளை செயலா் வள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதையடுத்து, ரமேஷ் பைரவி மதன் தலைமையில் பரவட்டும் பாவேந்தா் படைப்புகள் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஜெயந்தி ராஜவேலு தொகுத்து வழங்கினாா். தேவி நன்றி கூறினாா்.
தமிழக அரசு நிதியுதவியுடன்அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல் புதுவை தலைமை நீதிபதி வெளியிட்டார்
