சென்னையில் ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது போதைப் பொருள் சிக்கியது.
பிடிபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல் ரஹ்மானிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் சென்குன்றத்தில் சோதனை நடத்தப்பட்டது.
செங்குன்றம் பகுதியில் மன்சூர், இப்ராஹிம் ஆகிய இருவரை கைது செய்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 6.92 கிலோ மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் போதைப் பொருட்களை சென்னையில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்று, அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.