மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் வாக்குப் பதிவில், இஸ்லாமிய வாக்காளர்களை போலீசார் வாக்களிக்க விட மறுப்பதாக உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புகார் அளித்தார்.
முஸ்லிம் பெண்களிடம் புர்காவை கழற்ற கூறியும் முஸ்லிம் ஆண்களிடம் தேவையின்றி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை போலீசார் கேட்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது.
இதனையடுத்து, முஸ்லிம் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.