குற்றவாளிகளை பிடிக்க அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது – அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ‘பாரத்போல்’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உருவாக்கிய போர்ட்டலின் மிக முக்கியமான அம்சம் மத்திய, மாநில ஏஜென்சிகள் இன்டர்போலுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் விசாரணைகளை விரைவுபடுத்தவும் அனுமதிக்கும்,” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஒரு குற்றம் செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பியோடியவர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகளாவிய சவால்களை நாம் கண்காணித்து நமது உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்க வேண்டும். பாரத்போல் அந்தத் திசையில் ஒரு படியாகும்” என்று கூறினார்.…

பான் இந்தியா படத்திற்காக பெரிய நிறுவனத்துடன் இணையும் இயக்குநர்

பான்-இந்தியா திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் பூஷன் குமாருடன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று, வசூலிலும் சாதனை படைத்த ‘அமரன்’ படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இதனால் அவர் ரசிகர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள அடுத்த படம் தொடர்பான அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு உள்ளனர். இதனிடையே, பெரிய அளவிலான திரைப்படங்களை தயாரிப்பவர் பூஷன் குமார். பாலிவுட்டில் பல திரைப்படங்களை தயாரித்துள்ள பூஷன் குமார் Hurun India Rich List 2022-ம் ஆண்டு பட்டியலில் ரூ.10,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் 175-வது இடத்தில் இடம்பிடித்தார். இதனால் ராஜ்குமார் பெரியசாமி மற்றும்…

சபரிமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கவிருக்கும் நிலையில் சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எரிமேலியில் பேட்டை துள்ளி காட்டுப் பாதை வழியாக பெருவழிப்பாதையிலும், பம்பையில் குளித்து விட்டு சன்னிதானம் செல்லும் சிறு வழிப் பாதை வழியாகவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை நிரம்பி வழிகிறது. பல மணிநேரம்…

பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ்

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி பதிவுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பானி பூரி விற்பனையாளர் 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார். ஆன்லைன் பேமெண்ட் (RazorPay, PhonePe) மூலம் பானி பூரி விற்பனையாளரின் பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வங்கிகள் மட்டுமின்றி யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். அதன்படி இந்த பானி பூரி வியாபாரியை கண்டறிந்து அனுப்பட்டுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நோட்டீஸில், பிரிவு 70-இன் கீழ் பானி பூரி விற்பனையாளரை நேரில் வந்து ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் வரம்பை தாண்டிய பிறகு ஜிஎஸ்டி…

அரசியலமைப்பு குற்றத்தில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது- காங்கிரஸ் தலைவர் கார்கே

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்கு மன்னிப்பு கேட்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்திருந்தார். அனைத்து சமூதாயத்தினரும் அமைதி காக்க வேண்டும். மன்னிப்போம், மறப்போம் எனக் கூறியிருந்தார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்ட ஓரிரு நாளிலேயே புதிய வன்முறை வெடித்தது. நேற்று மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை ஒரு கும்பல் தாக்கியது. இந்த திடீர் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இம்பால் கிழக்கு மாவட்ட எல்லையான சைபோல் கிராமத்தில் இருந்து பி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். படையை அகற்றத் தவறியதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிப்பூர் தீப்பற்றி எரிவதற்கான குற்றத்தில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் கார்கே வெளியிட்டுளள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க.…

பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடர்- தமிழக அரசு அறிவிப்பு

வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களுக்கு 2 ஆயிரம் வழங்கப்பட்டது. புயலால் பாதிப்பு சீரமைப்புக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போபாலில் இருந்து பிதாம்பூருக்கு நச்சுக் கழிவை மாற்றியதற்கு எதிர்ப்பு போராட்டகாரர்கள் மீது போலீசார் தடியடி

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1984-ம் ஆண்டு கார்பைடு தொழிற்சாலையில் இருந்து வெளியான விசவாயுவால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 வருங்கடகளாக நச்சுக் கழிவு அங்கேயே சேமித்து வைக்கப்பட்டிருந்தது. சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை தொழிற்சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவை 12 கண்டெய்னர்கள் மூலம் தார் நகரில் உள்ள பிதாம்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவு 12 பிரத்யேக கண்டெய்னர்கள் மூலம் பிதாம்பூர் கொண்டு செல்லப்பட்டது. அதேவேளையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மற்றொரு நகருக்கு கொண்டு செல்லப்படுவது என்ன நியாயம்?. அதை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய பிரதேச…

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனையில் கரைப்பு!

மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் இன்று(டிச. 29) கரைக்கப்பட்டது. அன்னாரது உடல் தில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நேற்று(டிச. 28) தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எரிவூட்டப்பட் அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட அஸ்தி சீக்கிய மரப்புப்படி இன்று கரைக்கப்பட்டது. இதற்காக மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கௌர், அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் குருத்வாரா அருகே யமுனை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள அஸ்தி படிக்கரைக்கு இன்று காலை சென்று அங்கு யமுனை நதியில் கரைத்தனர். தில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, நாட்டின் முதல் சீக்கிய பிரதமராகப் பதவி வகித்த…

குஜராத்தில் ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்சி மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.07 மணியளவில் பச்சாவ் நகரின் வடகிழக்குப் பகுதிக்கு 18 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று கட்ச் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது கட்ச் மாவட்டத்தில் இந்த மாதம் ஏற்பட்ட 3 வது நிலநடுக்கமாகும். இதற்கு முன்னர், டிச. 7 அன்று 3.2 ரிக்டர் அளவிலும், டிச. 23 அன்று 3.7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. கடந்த நவம்பர் 15 அன்று குஜராத்தின் பதான் நகரில் 4.2 ரிக்டர் அளவிலும், நவம்பர் 18 அன்று கட்ச் மாவட்டத்தில் 4 ரிக்டர்…

உலகில் மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழி- ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையாகும்.- வானொலியில் பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 117-வது நிகழ்ச்சி இன்று ஒலி பரப்பானது. இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ உரையில் மோடி பேசியதாவது:- அடுத்த ஆண்டு முதல்முறையாக உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கிறது. மீடியா, பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான்கள், படைப்பாற்றல் உலகைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன மரபுடன் இணைக்க ஏதுவாக constitution75.com என்ற பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனமே நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது. உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையாகும். இது எங்களுக்கு பெருமையான விஷயம். உலக நாடுகளில் தமிழ்மொழியை கற்று கொள்பவர்களின்…