பீகாரில் மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது

பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தரமற்ற பொருட்களை கொண்டு பாலம் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பீகார் மாநிலத்தில் இன்னொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் படேதா – கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment