பிஜாபூர் மாவட்டத்தில் நக்சல் தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு விரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த மாநில காவல் பணிக்குழு மூத்த கான்ஸ்டபில் பரத் லால் சாஹூ மற்றும் கான்ஸ்டபில் சதெர் சிங் தாக்குதலில் உயிரிழந்தனர். தரெம் காவல் எல்லைக்கு உட்பட்ட மண்டிமர்கா காட்டுப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

இந்த தாக்குதலில் காயமுற்ற புருஷோத்தமன் நாக், கோமல் யாதவ், சியாராம் சொரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோபருக்கு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

Related posts

Leave a Comment