புதுச்சேரி அரசின் ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 14 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல் கட்ட தவணையாக ஒரு நபருக்கு ரூபாய் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் 30 லட்சத்து 80 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை தலைவர் அங்காளன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், அணிகளின் துணை அமைப்பாளர்கள் சரவணன், கோபி, கலிமுல்லா, காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், ஹரி கிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், ஏழுமலை, சபரி, அக்பர், மிலிட்டரி முருகன், திலகர், மனோகர், கார்த்திகேயன், பாலமுருகன், பிரவின், அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.