புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 25 பயனாளிகளுக்கு தொடர் நோயை குணப்படுத்துவதற்கான நிதி உதவி அவரவர் வங்கி கணக்கில் பெறுவதற்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான பிறா சிவா அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன் தாஸ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன்,
சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொழிலாளர் முன்னேற்ற பேரவை தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதி திராவிட அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் ராஜி, கே வி ஆர் ஏழுமலை, பாலகுரு, மிலிட்டரி முருகன், தக்ஷிணாமூர்த்தி, கார்த்திகேயன், பாலமுருகன், அன்பு நிதி, முருகையன், மனோகர், ராஜா முகமது, பிரவின், பரதன், அபிமன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர்
தொடர் நோயை குணப்படுத்துவதற்கான நிதி உதவிபுதுவை எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்
