புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வக்பு வாரிய சட்டத்தில் மோடி கொண்டுவந்ததிருத்தங்கள் மதத்தின் அடிப்படையை தவிர்க்கின்றவகையில் உள்ளது. அனைத்து மதத்தினரும் தங்கள்கொள்கை, கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த உரிமை உண்டு. ஆனால் புதிய திருத்தத்தில்இந்துக்கள் வக்பு வாரியத்தில் உறுப்பினர்களாகசேர்க்கப்பட்டுள்ளனர். அறங்காவலர் குழுவில்இந்துக்களை தவிர யாரும் இருக்க முடி யாது. ஆனால் வக்பு வாரியத்தில் இந்துக்கள் இருப்பார்கள் என்பதைஎப்படி ஏற்க முடியும்? திட்டமிட்டு இஸ்லாமியர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இதனை பார்க்கின்றோம். இந்தியா கூட்டணி இந்தசட்டத்தை
ஒருபோதும் அனுமதிக்காது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற இந்தியகூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்வர்ரங்கசாமி கூறியுள்ளார். இது முதல்வர் ரங்கசாமிஅங்கமாக உள்ள பாஜக அரசு புதுச்சேரிக்கு மாநிலஅந்தஸ்து தர முடியாது என்பதை தெளிவாககி விட்டதாக தெரிகிறது. முதல்வர் ரங்கசாமி கடந்த
2022ல் சட்டமன்ற தேர்தலில் பாகைவோடு கூட்டணி
வைத்த சமயத்தில் புதுச்சேரிக்கு மாநி அந்தஸ்து பெறுவதற்காகத்தான் பாஜகவோடு சேர்கின்றேன்
என்று கூறினார். அது இப்போது என்ன ஆயிற்று?
பாஜக கூட்டணியில் டருந்து கொண்டு, இண்டியா
கூட்டணி மாநில அந்தஸ்திற்கு கூரல் எழுப்ப கோருகிறார்.இதன் மூலம் எப்போதுவேண்டுமானாலூம்
ரங்கசாமி கட்டி மாறுவதில் வல்லவர் என்பது தெரிகிறது. இண்டியா கூட்டணி காங்கரஸ் திமுகவின் கொள்கை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான்.
நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தார். இதிலிருந்து பிரதமரை பார்ப்பதற்கே பயப்படுகிறார்
என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு மாதிலத்தின் கோரிக்கைகள், மக்கள் பிரச்சனைகளை பிரதமரிடம் முதல்வர்
கூறித்தான் தீர்க்க வேண்டும். அது முதல்வரின் கடமை. இவர் டெல்லி செல்லாததால், மாதில முதல்வரின் கடமையை செய்யாததால் புதுச்சேரியின் வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த அண்டைவிட ரூ.300 கோடி குறைவாக மத்திய அரசு கொடுத்துள்ளது. கூட்டணி ஆட்சி அமைந்தால் இரட்டை இன்ஜின், நிதியை வாரி கொடுப்போம் என்று பாஜக கூறியது,
நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டங்கள், ரயில் திட்டங்கள் ஏதும் வரவில்லை. 10 ஆண்டாக மோடி அரசும், ரயில்வே துறையும் புதுச்சேரியை புறக்கணித்துள்ளது. பாஜக கூட்டணியில் ரங்கசாமி இருப்பதில் அர்த்தம் இல்லை. முதல்வர், நின்துறை அமைச்சர், சபாநாயகர் மின்துறையை தனியபரிடம் தருவதை ஏற்க மாட்டேம் என்று கூறினர். அனால் அன்றைய தினமே 700 சதவீதம் தனியாரிடம் ஒப்படைக்க டெண்டர்
இறுதி செய்ய கால அவகாசம் தேவை, 12.8.2024க்குள்
டெண்டரை பெற்று அதன்பிறகு மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைக்க தயார் என்று நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர். ஒருபுறம் சட்டமன்றத்தில் மின்துறையை தனியார் மயமாக்கமாட்டோம் என வாக்குறுதி, இன்னொரு புறம் கொள்ளைப்புறம் வழியாக மின்சாரத்தை தனியாரிடம் தாரை வார்க்கும். வேலையை செய்து கொண்டுள்ளது.
அதானியிடம் பேரம் பேசி மின்துறையை ஒப்படைக்க வேகமாக செய்து வருகின்றனர்.மின்துறை தனியார் மயத்தை காங்கிரஸ்முழுமையாக எதிர்க்கும். சட்டசபையை
கிள்ளுக்கரையாக முதல்வர், சபாநாயகர், மின்துறை அமைச்சர் ஆக்கியிருப்பது வேதனையை தருகிறது.
பேனரை முழுமையாக தடை செய்யகாங்கிரஸ் ஆட்சியில் உத்தரவு போடப்பட்டது.அது இன்றும் நடைமுறையில் உள்ளது. நகராட்சிகொம்யூன் பஞ்சாயத்துக்களில் குறிப்பிட்ட பகுதிகளில்பேனர், கட் அவுட்கள் வைக்கலாம். மற்ற இடங்களில்வைத்தால் கடும் நடவடிக்கை வன உத்தரவு
பிறப்பித்தோம். மீறி வைக்கப்பட்டதால் காங்கிரஸ்
மற்றும் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் மனு
போட்டனர். விதிமுறை மீறி பேனர் வைத்திருந்தால் நீதிமன்ற
அவமதிப்பிற்கு ஆளாவார்கள் என உயர்நீதிமன்றம்
உத்தபவு பிறப்பித்தது. அதை பின்பற்றி புதுச்சேரி
தலைமை நீதிபதியும் பேனர் வைத்தால் நீதிமன்ற
அவமதிப்புக்கு ஆளாவார்கள் என எச்சரிக்கை தெரிவித்து இருந்தார். அதை மீறி ரங்கசாமி பிறந்தநாளிற்கு முன்பாக பேனர், கட் அவுட் புகார்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்த எண்ணையும் வருவாய்த்துறை நிர்வாக காரணமாக இரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தனர். அதன் மூலம் முதல்வர் ரங்கசாமிக்கு பேனர், வைக்க சாதகமாக மாவட்ட நிர்வாகம்
செயல்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை, மணல் கடத்தலை பலர்கூட்டாக சேர்ந்து செய்கன்றனர். காவல்துறை மெத்தன போக்கால் கஞ்சா விற்பனை அதிகம். இத்நிலையில் புதுச்சேரியில் மக்கள் தொகைக்கு ஏற்ப மது கடைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளோம். என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இதுவரை 900தக்கும் மேற்பட்ட பார்கள், ரெஸ்டேப
பார்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 15
லட்சம் மக்கள் தொகைக்கு இவ்வளவு பார்கள்தேவையா? இது புதுச்சேரி கலாச்சாரத்தை பெரியஅளவில் பாதிக்கிறது. மக்கள் நிம்மதியாக தாங்க முடியவில்லை.
மக்கள் அதிகம் வசிக்கும் இட ங்கள், மருத்துமனை, பள்ளி கூடங்கள், கோவில்கள், வழிபாட்டு தலங்கள்அருகில் உள்ள மது கடைகளை மூட கூறினோம்.ஆனால் திறப்போம் என்கிறார். அதற்கு காரணம் கையூட்டு பெறுவது. இந்த ஆட்சியில் ஊழலைத்தவிர எதுவும் இல்லை. தேர்தவில் படு தோல்வி அடைந்தும் ஆட்சியாளர்கள் பாடம் கற்கவில்லை. இந்த ஆட்சியில் வேதனையை தவிர மக்கள் வேறு ஒன்றும்
அனுபவிக்கவில்லை..
ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டராஜசேகர் சாராய கை யை அடித்து உடை த்ததற்குஆதாரம் உள்ளது. அவர் மீது போலீசார் வழக்கும்பஇவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளஒருவரை ஊர்க்காவல் படை தேர்விற்கு அழைத்தேஇருக்க கூடாது. ஆனால் அழைத்து தேர்வில் பங்கேற்கசெய்ததுடன், தற்போது எப்ஐஆரில் அவர் பெயரை
நீக்கியுள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறைதலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரங்கசாமி இண்டியா கூட்டணியில் இணைவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும். அதற்கு நான் கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.