”என் மகன் ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டது போல் நீங்கள் அவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்” என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா பேசினார்.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் இண்டியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுல், அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில், ”கடந்த 10 ஆண்டுகளாக, நாட்டின் சாமானியர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த நாடு தனது குரலைக் கேட்க விரும்புகிறது. ஆனால் நரேந்திர மோடியின் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் என்ற புயல் வீசுகிறது,” என்றார்.
எங்கள் குடும்பத்தின் வேர்கள் இந்த மண்ணின் மண்ணோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவு, கங்கை நதியைப் போல தூய்மையானது; இந்த உறவு அவாத் மற்றும் ரேபரேலி விவசாயிகளின் போராட்டத்துடன் துவங்கியது. இந்திராவின் இதயத்தில் ரேபரேலிக்கு தனி இடம் இருந்தது. அவர் மிகவும் நெருக்கமாக வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அனைவரையும் மதிக்க வேண்டும், பலவீனமானவர்களைக் காக்க வேண்டும், நீதிக்கு எதிராகப் போராட வேண்டும், புனிதமாக இருக்க வேண்டும் என இந்திராவும் ரேபரேலி மக்களும் எனக்குக் கொடுத்த அதே பாடங்களை ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் கொடுத்திருக்கிறேன். உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை. என்னிடம் உள்ள அனைத்தும் உங்களுடையது. என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டது போல் நீங்களும் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.