கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி இல்லை.
ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்.நான் வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி அதிமுக கட்சி தான். அதிமுக ஆட்சியில் தான் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சி தலைவி காலத்திலும், அம்மா மறைவுக்கு பின் அம்மாவுடைய அரசும் சரி நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க அதிமுக அரசு தான் காரணம் என்று கூறினார்.