ஆந்திரா மாநிலம் சித்தூர், திருப்பதி, நந்தியாலா, கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
நேற்று திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சில்லென்ற காற்று வீசியது.
இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் குளிரில் கடும் அவதி அடைந்தனர். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.