பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்னு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், நெல்லையில் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் மயிலாடுதுறையில் வக்கீல் சுதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
அத்துடன், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்கள் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகையும் வாழ்த்து பெற்றார். அப்போது செல்வ பெருந்தகையும் உடனிருந்தார்.✒️