தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடுவது வழக்கம். எனவே சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது. அதன்படி நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி விற்பனை படு ஜோராக நடந்தது. வியாபாரிகள் ஆடுகளை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்றுச் சென்றனர். செவ்வாய்கிழமை தோறும் நடக்கும் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று அதிகாலை முதலே தீபாவளி பண்டிகைக்கான விற்பனை களைக்கட்டியது. இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு செல்வோர் மொத்தமாக 8 முதல் 10 ஆடுகளை விலைபேசி வாங்கி சென்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மட்டுமல்லாமல் தேனி, மதுரை மற்றும் கேரளா வியாபாரிகளும் வந்திருந்தனர். ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகாலையில் தொடங்கி 10 மணி வரையிலும் மேலப்பாளையம் ரவுண்டானா வரை கடுமையான…
Category: தமிழ்நாடு
சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்
ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மன் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் அக்.19-ம் தேதி சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து தினமும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. கீழரதவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு…
தவெக மாநாட்டிற்குச் சென்ற இளைஞர் விபத்தில் பலி!மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காகச் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உடன் சென்ற மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கவுள்ள நிலையில், அதிகாலை முதலே தொண்டர்கள் வி. சாலை பகுதியில் குவிந்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் தொண்டர்கள், ரசிகர்கள் வி. சாலை பகுதிக்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில்,தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில்…
சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சிக்கியது என்ன?
சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. சிஎம்டிஏ அலுவலகத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சிஎம்டிஏ அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது. அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அவர், அமைச்சர் பதவியில் இருந்தபோது 1058% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தாம்பரத்துக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதி வழங்க சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில்,…
த.வெ.க. மாநாடு வெற்றி பெற கோவிலில் விஜய் ரசிகர்கள் வழிபாடு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு வெற்றி பெற வேண்டி புதுவை யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்ட விஜய் ரசிகர்கள் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் வழிபாடு நடத்தினர். சனிபகவானின் காலடியில் மாநாட்டு பத்திரிகையை வைத்து விஜய் பெயருக்கு அர்ச்சனை செய்து மாநாடு வெற்றி பெற வேண்டினர்.
தீபாவளி- பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையிலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறும் சில புதிய கட்டுப்பாடுகள் அரசு சார்பில் வழங்கப்படும். இந்த ஆண்டு பட்டாசுகள் வெடிக்க நேரக்கட்டுப்பாடு இருக்குமா? அல்லது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாட்டில் (2 மணிநேரம் பட்டாசு வெடிக்கலாம்) மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. தீபாவளியையொட்டி தமிழக அரசு சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவையாவன, தவிர்க்க வேண்டியவை
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய 4 பெண்களிடம் விசாரணை
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள். “நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்ட மிதில்………….” இவ்வாறு முதல் இரண்டு வரிகளை பாடிய அந்த 4 பெண்களும் 3-வது வரியான, தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்- என்ற வரியை படிக்க தொடங்கும் போது சற்று திணறலுக்குள்ளனார்கள். 3 வினாடிகள் திணறிய அந்த பெண்கள் அந்த வரியை தவிர்த்து விட்டு அடுத்து 4-வது வரியான, “தக்கசிறு பிறைநுதுலும் தரித்தநறுந் திலகமுமே….”…
தறிகெட்டு ஓடிய சொகுசு கார்- விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற நபருக்கு சரமாரி அடி:
சென்னை எழும்பூர் அருகே சொகுசு கார் ஒன்று தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியுள்ளது. மேலும், கார், இரண்டு பைக்குகளும் பலத்த சேதமடைந்துள்ளன. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்களே பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர். மேலும், காரின் முகப்பில் உகாண்டாவுக்கான தூதரக அலுவலகம் என குறிப்பிடப்பட்ட போஸ்டர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளான போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்காக நாம் கூடியிருக்கிறோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரகவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை…
வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க குழு அமைப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
