சீனாவில் புதியவகை கொரோனா மெடாநியுமோ வைரஸ்

சீனத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்எம்பிவி அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்எம்பிவி எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பே இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், இதுவரை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையாலோ அல்லது உலக சுகாதார அமைப்பாலோ அறிவிக்கப்படவில்லை. பொதுவாகவே குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிவது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அது என்ன ஹியூமன் மெடாநியூமோவைரஸ்?இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ 2001ஆம் ஆண்டு. இது பாதித்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு…

தென்கொரியா: விமான விபத்து பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தின் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய தீயணைப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி எரிந்து பயங்கர புகை கிளம்பியது. விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேறுவதற்குள்ளாக விமானம் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. “இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர், 120 பேர் பலியாகியுள்ளனர்” என்று தென்கொரியாவின் தேசிய தீயணைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பறவைகள் மீது மோதல் மற்றும் வானிலை காரணங்களால் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் ஒரு…

லெபனான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்! -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

லெபனான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான 14 மாதங்களாக நடைபெற்றுவந்த போரை நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்கா – பிரான்சின் ஒப்பந்தம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகை தொலைக்காட்சி உரையில் பேசுகையில், “இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த ஒப்பந்தத்தின்படி, புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும்.இதனால், லெபனான்- இஸ்ரேல் எல்லையில் போர் முடிவுக்கு வரும். போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும். இது இரு நாடுகளுக்கு இடையேயான விரோதப் போக்கை நிரந்தரமாக நிறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. போரை…

காலநிலை நிதி ஒப்பந்தத்தை இந்தியா நிராகரிப்பு

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்கவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகின்றன. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிதி தொகுப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் வழங்க இலக்கு நிர்ணயிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தொடர்பாக அஜர்பைஜானில் நடைபெற்ற காலநிலை மாநாட்டின் நிறைவு நாளில் நிதி தொகுப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காலநிலை நிதி தொகுப்பை மூன்று மடங்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2035 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர்கள்…

“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!

ரஷியா – உக்ரைன் போர் நடைபெற்றுவருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி ஜலுஷ்னி கூறுகையில், “2024 ஆம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 10,000 வட கொரிய ஆயதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனில் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான். ஆனால் சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்” என்றார். வலேரி ஜலுஷ்னி, உக்ரைனின் ராணுவ மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார்.…

அதானிக்கு அமெரிக்கா பிடிவாரண்ட் ஒப்பந்தங்களை அதிரடியாக ரத்து செய்த கென்யா

சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவை தொடர்ந்து கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம், மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்முறையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கென்யாவின் நைரோபி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆப்பிரிக்காவின் பரபரப்பான விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக அதனை 30 ஆண்டுகள் குத்தகைக்கு…

ரஷியா-உக்ரைன் அணு ஆயுதபோர். மூலும் அபாயம். மக்களை போருக்கு தயார்படுத்தும் நாடுகள்..!

ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகள் தங்கள் மக்களிடம் போருக்கு தயாராக இருக்கும் படி அறிவுறுத்தி வருகிறது. சமீபத்தில் தான் ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஆயிரமாவது நாளை கடந்தது. இதனிடையே ஸ்வீடன், பின்லாந்து, நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் தங்களது நாட்டினருக்கு ஆபத்து காலத்தில் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளன. இது தொடர்பாக ஸ்வீடன் மில்லியன் கணக்கான துண்டுப்பிரசுரங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. அவற்றில் போர், இயற்கை பேரழிவுகள் மற்றும் சைபர் அல்லது பயங்கரவாத தாக்குதல்களுக்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பது பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருந்துள்ளது. பின்லாந்து பல்வேறு நெருக்கடிகளுக்கான தயார்நிலை குறித்த தகவல்களை சேகரிக்கும் வலைத்தளத்தை தொடங்கியுள்ளது. ஸ்வீடன் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் “இராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மோசமான சூழ்நிலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்…

உலக நாடுகளில் பாதுகாப்பாக தங்க இருப்பை சத்தமில்லாமல் இந்தியாவுக்கு மாற்றும் ஆர்பிஐ!

போர்ச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் உலக நாடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்கும் தங்க கையிருப்பை இந்தியாவுக்கு ஆர்பிஐ மாற்றி வருகிறது. உலகிலேயே அதிக தங்க கையிருப்பை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு ஒரு முன்னணி இடம் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அண்மையில், தீபாவளியையொட்டி வரும் தாந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு, லண்டனில் உள்ள இங்கிலாந்து வங்கியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 102 டன் தங்கத்தை சப்தமில்லாமல், இந்தியாவின் பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாற்றியிருக்கிறது ஆர்பிஐ. இதற்கு முன்பு, இங்கிலாந்து வங்கியிலிருந்து 100 டன் தங்கத்தை உள்நாட்டுப் பெட்டகங்களுக்கு இந்தியா மாற்றியிருந்தது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு தங்கத்தைக் கொண்டு வருவது மிகவும் ரகசியமாக, சிறப்பு விமானம் மூலம், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது உள்நாட்டில் மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதன் உறுதித் தன்மையையும் இது வெளிப்படுத்துகிறது.…

போர்களால் உலகளாவிய தெற்கு நாடுகள் உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிப்பு- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பிரேசில் வகித்து வருகிறது. பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- போர்களால் உலகின் தெற்கு நாடுகள் (Global South) உணவு, எரிபொருள், உரம் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உலகின் தெற்கு நாடுகளின் சவால்கள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொள்ளும்போதுதான் நமது விவாதங்கள் வெற்றிபெற முடியும். டெல்லி உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்க யூனியனுக்கு G20-ன் நிரந்தர பிரதிநிதி அந்தஸ்தை வழங்கியதன் மூலம் உலகின் தெற்குப் பகுதியின் குரலை வலுப்படுத்தியதுபோல், உலகளாவிய நிர்வாக அமைப்புகளை சீர்திருத்துவோம். இவ்வாறு பிரதம் மோடி கூறினார்.…

இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

கொழும்பு: இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில், 21 உறுப்பினா்கள் அடங்கிய சிறிய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பேற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், வீண் செலவுகளைக் குறைக்கும் வகையில் ஆட்சி முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதாக அதிபா் அனுர குமார திசாநாயக குமார திசாநாயக தோ்தலுக்கு முன்னரே வாக்குறுதி அளித்திருந்தாா். மக்கள் வரிப்பணம் விரயமாவதைத் தடுப்பதற்காக, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சா்களைக் கொண்ட அரசை அமைப்பதாகவும் அவா் கூறியிருந்தாா். இந்த நிலையில், நாடாளுமன்றத் தோ்தலுக்குப் பிறகு திங்கள்கிழமை அவா் அறிவித்த அமைச்சரவையில், 21 அமைச்சா்கள் மட்டுமே இடம் பெற்றளனா். இதன் மூலம், ஆட்சி முறை சீா்திருத்தம் தொடா்பான தனது வாக்குறுதியை திசாநாயக நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் திசாநாயக வெற்றி பெற்ற பிறகு, அதிபா் உள்பட வெறும் 3 அமைச்சா்களுடன் அரசு செயல்பட்டு…