புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றிய ஊழியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைப்பெற்றது
சட்டசபைச் செயலகத்தின் செயலர் தயாளன் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் சட்டசபை பல்நோக்கு பணியாளர் முகமது ஆரிப்க்கு பணிநிறைவைப் பெற்றதை பாராட்டி பேசினார்.
37 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்திலேயே பணியாற்றியவர் கடமையுணர்வோடு பணியிற்றியவர் என குறிப்பிட்டார். கண்காணிப்பாளர் முருகன் அவரின் சிறப்புகளை எடுத்துரைத்தார். செயலர் தயாளன் நினைவு பரிசினை வழங்கினார்
இவ்விழாவில் விவாதப்பதிவாளர் அலமேலு கண்காணிப்பாளர்கள் முருகன் , சுகுமாரன் மற்றும் செயலக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்