என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியின் ஊழல் குறித்து காங்கிரஸ் கூறிய ஊழல் புகார்கள் உண்மை என்பதை அவர்களே கூறுகிறார்கள் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி முன்னாள்‌ முதல்வர்‌ நாராயணசாமி நேற்று நிருபர்களிடம்‌கூறியதாவது:29வது பாராளுமன்றத்தின்‌முதல்‌கூட்டத்தொடர்‌
ஜூன்‌ இறுதியில்‌ தொடங்கியது. ஜூலை 2, 4ம்‌தேதிகளில்‌ மக்களவையும்‌, மாநிலங்கள்‌அவையும்‌,ஐனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து முடித்து
வைக்கப்பட்டது. ராகுல்‌ பாராளுமன்ற மக்களவைஎதிர்‌கட்சி தலைவராக பொறுப்பேற்று முதல்‌உரைஆற்றும்போது, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு,
இந்த நாட்டில்‌அனைத்து மதத்தினரும்‌ஒற்றுமையாகஇருந்து வருகிறார்கள்‌. ஆனால்‌ பாஜக ஆர்‌எஸ்‌எஸ்‌தாங்கள் ‌இந்து மதத்தின்‌ காவலர்கள்‌ என்று சொல்லிமற்ற மதத்தினர்‌ மீது வெறுப்பை அள்ளி வீசுவதும்‌,மற்ற மதத்தினரை உதாசீனப்படுத்துவதுமானவேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள்‌ என்று
பேசினார்‌. ஆனால்‌அதை பிரதமர்‌மோடி ஓட்டுமொத்தஇந்துக்களையும்‌ ராகுல்‌ தவறாக பேசியதாக திரித்துகூறியபிறகு பாஜக காங்கஸ்‌ கட்சியை எதிர்த்து
போராட்டம்‌ நடத்தியது. பொய்யையே மூலதனமாகவைத்து பாஜக செயல்பட்டு வருகிறது.பாராளுமன்ற நடவடிக்கையை தொலைக்காட்சியில் ‌நேரடியாக பார்த்தேன்‌. இந்து மதத்தின்‌ பிரதிநிதிகள்‌ பாஜகஆர்‌எஸ்‌எஸ்‌ மட்டுமல்ல. இந்து மக்கள்‌ அன்பைகொடுக்கிறவர்கள்‌, மக்களை நேசிக்கிறவர்கள்‌,இந்துத்துவா என்று சொல்லி பாஜக வெறுப்பு
நிலையை உருவாக்குவதை முறியடிக்க வேண்டும்‌என்றுதான்‌ ராகுல்‌பேசினார்‌. இது மக்களால்‌பாராட்டப்படுகிறது. நீட்‌, அக்னி வீர்‌, வேலையில்லாஇண்டடாட்ட.ம்‌, விலைவாசி உயர்வு, மணிப்பூர்‌ கலவரம்‌
ஆகியவைகளைப்பற்றி ராகுல்‌பேசியதற்கு பிரதமர்‌மோடி எந்த பதிலும்‌ தெரிவிக்காமல்‌ தோல்வியை
ஒப்பு கொண்டுள்ளார்‌.

புதுச்சேரியில்‌அரசியல்‌களம்‌ சூடு பிடித்துள்ளது. பாஜக எம்‌.எல்‌.ஏ.க்கள்‌, நியமன எம்‌.எல்‌.ஏ.க்கள்‌, சுயேட்சைஎம்‌.எல்‌.ஏ.க்கள்‌ 7 பேர்‌ஏற்கனவே ரகசிய கூட்டத்தை நடத்தி, அதில்‌ புதுச்சேரி மாநில பாஜக தலைவர்‌ கலந்து
கொண்டு அவர்களது கோரிக்கையாக இருக்கின்ற பாஜக அமைச்சர்களை மாற்ற வேண்டும்‌. முதல்வர்‌தன்னிச்சையாக செயல்படுகிறார்‌. எங்களை கலந்து ஆலோசிப்பதில்லை. ஆட்சியில்‌ உழல்‌மலிந்துவிடது
லஞ்சம்‌ தலை விரித்தாடுகிறது என்றகுற்றச்சாட்டுகளை வைத்து ஆளுநர்‌ ராதாகிருஷ்ணனைசந்தித்து பேசியுள்ளனர்‌.

அதன்பிறகு 7 எம்‌.எல்‌.ஏ.க்கள்‌ டெல்லிசென்று தேசிய பாஜக தலைவர்‌ நடா, அமைப்புசெயலாளா்‌ சந்தோஷ்‌ ஆகியோரை பார்த்து புதுச்சேரி
பாராளுமன்ற தேர்தலில்‌ பாஜக தோல்விக்கு முக்கியகாரணம்‌ மக்கள்‌நல திட்டங்களை நிறைவேற்றவில்லை,ரெஸ்டோ பார்கள்‌ மலிந்துவிட்டது, கையூட்டு பெற்றுகொண்டு மதுபான தொழிற்சாலைகளுக்கு .அனுமதி
கொடுக்கப்பட்டுள்ளது, பொதுப்பணித்துறையில்‌லஞ்சம்‌தாண்டவம்‌ ஆடுகிறது. குப்பை அகற்றுவதில்‌,சிவப்பு ரேஷன்‌கார்டு வழங்குவதில்‌ ஊழல்‌. அனைத்து
டெண்டர்களிலும்‌ கமிஷன்‌வாங்கப்படுகிறது போன்றஅடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சிக்குதரும்‌ ஆதரவை திரும்ப பெற்று, வெளியில்‌வந்துஆதரவு தர வேண்டும் ‌என்று கூறியுள்ளனர்‌.

கடந்த இர ண்டரை ஆண்டுகாலமாககாங்கிரகிஸ்‌கூறியகுற்றச்சாட்டுகளையே பாஜக எம்‌.எல்‌.ஏ.க்கள்‌ஏற்று மேல்‌ மட்டத்தில்‌கூறியிருப்பது காங்‌., கூறியகுற்றச்சாட்டை… ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்‌.

நாங்கள் ‌கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ரங்கசாமிஅல்லது அமைச்சர்கள்‌ யாரும்‌எந்தவித பதிலும்‌கூறவில்லை. ஆசிரியர்கள் ‌மாற்றத்திற்கு லஞ்சம்‌,

காவல்துறையில்‌ லஞ்சம்‌என பட்டியல்‌அதன்‌ விளைவுதான்‌ ஆளும்‌
கட்சி எம்‌.எல்‌.ஏ.க்களே மேலிடத்தில்‌புகார்‌ தெரிவித்துள்ளனர்‌. அது
அவர்களுடைய உட்கட்சி விவகாரம்‌.அதில் ‌தலையிடவில்லை. முதல்வர்‌
ரங்கசாமியும்‌, அமைச்சர்களும்‌பாஜக, சுயேட்சை எம்‌.எல்‌.ஏ. க்களின்‌
புகார்களுக்கு என்ன பதில்‌சொல்லபோகின்றனர்‌. ஆனால்‌ஒன்று மட்டும்‌
தெளிவாக தெரிகிறது. இந்த ஆட்சிஆட்‌ம்கண்டுவிட்டது. என்‌ஆர்காங்‌.,
பாஜக நாட்கள்‌ எண்ணப்படுகின்றன.ஏற்கனவே மக்கள்‌ ஊாலை சகிக்க முடியாமல்தான்‌காங்கிரஸ்‌வேட்பாளரை 1.36 லட்சம்‌ வாக்குவித்தியாசத்தில்‌ வெற்றி பெற செய்தனர்‌. ஊழலைமுதல்வரும்‌, அவைச்சர்களும்‌ மூடி மறைக்க
பார்க்கின்றனர்‌. சந்தன கட்டை கடத்தல்‌ பூதகரம்‌ஆகின்றது. ஆட்சியில் ‌ஊழலை தவிர வேறு ஒன்றும்‌நடக்கவில்லை.ஒரு அமைச்சரின் ‌மனைவியின்‌பெயரில்‌கன்னியகோயில் ‌12 ஆயிரத்து 400 சதுர அடி நிலம்‌
வாங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை வாங்கி பின்னர்‌பெட்ரோல் ‌பங்க்‌ போட நடவடிக்கை எடுத்துஐஓசி ஒப்பந்தம்‌ போட்டுள்ளனர்‌. மனைவியின்‌
தம்பி தமிழ்செல்வன்‌ பெயரில்‌ வசந்தி குத்தகைக்குவிட்டதாக பத்திரம்‌ எழுதப்பட்‌டுள்ளது. பெட்‌ரோல்‌பங்க்‌போட அனுமதி பெற்றுள்ளார்‌. எந்த தொழிலும்‌செய்யாத அமைச்சர்‌ மனைவிக்கு சொத்துக்களை
வாங்க எங்கிருந்து பணம்‌ வந்தது.

அவர்கள்‌ அமைக்கவுள்ள பெட்ரோல்‌பங்க்‌பின்பகுதியில் ‌சீனுவாச அப்பார்ட்மெண்ட்‌குடும்பத்தை சேர்ந்தவர்கள்‌ நகர்‌ உருவாக்க, தனித்தனி
வீடுகள்‌ கட்ட மனைகள்‌போடப்பட்டு விற்பனை செய்துள்ளனர்‌. அதில்‌மனைகளை வாங்கியவர்கள்‌வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர்‌. அந்தஇடத்திற்கு செல்லும் ‌4 ஆயிரத்து 200 சதுர அடி. இடத்தை
பெட்ரோல்‌பங்க்‌ போடுவதற்காக மதில்‌ சுவரை உடை.த்து ஆக்கிரமித்துள்ளனர்‌. போலீசார்‌, கலெக்டரிடம்‌ புகார்‌ அளித்தும்‌ நடவடிக்கை இல்லை. இது அமைச்சரின்‌ அதிகாரதுஷ்பிரயோகம்‌ ஆகும்‌. வழிக்காக கட்டப்பட்டஆர்ச்சை இடித்துள்ளனர்‌. போலீசாரிடம்‌தெரிவித்தால்‌
சிவில்‌ வழக்கு என்கின்றனர்‌. மதில்‌௬வரை இடித்ததுஎப்படி சிவில்‌வழக்காகும்‌? தேர்தலில்‌தோற்றும்திருந்தவில்லை. அதிகார துஷ்பிரயோகதிதற்கும்‌,
ஆட்சியாளர்கள் ‌சொத்துக்களை அபகரிப்பதில்‌முனைப்பாக இருப்பதற்கும்‌ இது ஒரு அடையாளம்‌.இதற்கு விசாரணை கேட்டு பிரதமர்‌ மோடி, மத்திய
அமைச்சர்‌ அமித்ஷா மற்றும்‌ பெட்ரோலிய துறைஅமைச்சருக்கு கடிதம்‌எழுத உள்ளேன்‌.

அமைச்சர்‌ சொத்து வாங்கியது தொடர்பு படுத்திதந்‌தை பெரியார்‌ திராவிடர்‌கழகம்‌ போஸ்டர்‌ஓட்டியற்காக போலீசார்‌ வழக்கு போட்டுள்ளனர்‌.
காவல்துறைக்கு யார்‌ புகார்‌கொடுத்தது?சம்பந்தப்பட்டவர்கள்‌ மான நஷ்ட வழக்கு போடவேண்டும்‌. நான்‌ முதல்வராக இருந்த 5 ஆண்டுகாலத்தில்‌ புதுச்சேரி அரசின்‌ ஒரு நாற்காலியைகூட வீட்டிற்கு எடுத்து வரவில்லை. முதல்வர்‌,அமைச்சர்கள்‌ வாடகை வாங்கலாம்‌. ஆனால் ‌நான்‌
வாடகை கூட வாங்கிக்‌கொள்ளவில்லை. அதுபோல்‌எனது சொந்த வாகனத்தை பயன்படுத்தினேன்‌.

பொது வாழ்க்கையில்‌இருப்பவர்கள்‌ அரசுசொத்தை அபகரிக்க கூடாது. ஆனால்‌ ஒருஅமைச்சர்‌ ரூ.2 கோடி செலவு செய்து தனது வீட்டை
புதுப்பித்துள்ளார்‌. இது அரசு சொத்தை கொள்ளைஅடிப்பது. நடைபெறும்‌ ஊழல்‌ஆட்சிக்கு இந்தகூட்டணியே முடிவு செய்துவிடும்‌. இவ்வாறு அவர்‌கூறினார்‌.

Related posts

Leave a Comment