முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் நட்வார் சிங் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 93 ஆகும். நீண்ட காலம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நட்வர் சிங் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நட்வர் சிங் நேற்றிரவு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த நட்வர் சிங் கடந்த 1931 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவரது இறுதிச் சடங்கு இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். 2004-2005 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக நட்வர் சிங் இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆவார்.
முன்னதாக 1966 முதல் 1971 வரையிலான காலக்கட்டத்தில் நட்வர் சிங் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்தார். இவருக்கு மத்திய அரசு 1984 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது. இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.