புதுவை கோரிமேடு காவல்
நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சப்.இன்ஸ்பெக்டர் ரமேஷ்
தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில்ஈடுபட்டனர்.அப்போது ஜிப்மர் மருத்துவமனைஅருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில்சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரைபிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணாகபதில் அளித்ததால் சந்தேகம் அடைந்தபோலீசார் அவர்கள் வைத்திருந்தபைகளில் சோதனை செய்தனர்.அப்போது அதில் கஞ்சா, போதை ஸ்டாம்ப் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 பேரை கோரிமேடுகாவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுவிசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில்
அவர்கள் சேலம் மாவட்டம் கிச்சப்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கீத்குமார் ( 27), கருப்பூரை அஞ்சல் பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன்( 22), என்பதும் இவர்கள் குயிலாபாளையத்தில் உணவகம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூரிருந்து போதை பொருட்களுடன் வந்திருந்த கேரளா பாலக்காட்டை சேர்ந்த ஹைதர் (வயது 30), தலச்சேரியைசேர்ந்த முகமது பசல் ( 27] என்பதுதெரியவந்தது.மேலும் போதை பொருட்களை புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிமாணவர்களுக்கு விற்பனை செய்ததும்தெரியவந்தது. இதையடுத்துபோலீசார் அவர்களிடம்ரூ.25 லட்சம் மதிப்புள்ள .260 கராம்கஞ்சா, 180 கிராம் கஞ்சா எண்ணெய்ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து 4 பேரையும் கைது செய்தபோலீசார் அவர்களிடம் இவைகள் எங்கிருந்து வாங்கி கடத்தி வந்தார்கள் ?
இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
புதுவையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் போதை ஸ்டாம்ப் பறிமுதல்-தமிழகம், கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது
