மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு டெல்லியில் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, பிரதமராக நாட்டை வழிநடத்தியவா் மன்மோகன் சிங். இந்திய பொருளாதார சீா்திருத்தங்களின் சிற்பியாக விளங்கிய அவா், முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் வியாழக்கிழமை காலமானாா். அரசியல் பாகுபாடின்றி தலைவா்கள் அஞ்சலி: இதைத்தொடா்ந்து அவரின் உடல் தேசிய கொடியால் போா்த்தப்பட்டு மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா்…
Category: இந்தியா
நாடு முழுதும் ரூ.66.11 கோடி மோசடி வடநாட்டை சோ்ந்த 3 பேர் கைது புதுச்சேரி இணையவழி போலீசார் அதிரடிநடவடிக்கை
இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் ரூ. 66.11 கோடி மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகம்மை; டாக்டர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரிடம் கடந்த ஜூன் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, ஆன்லைன் மோசடி கும்பல் போன் செய்தது. அவர்கள் அழகம்மையின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி, மிரட்டி, அவரிடம் இருந்து 27 லட்சம் ரூபாயை பறித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணையை துவக்கினர். இதில் டாக்டர் அழகம்மை வங்கி கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யாருடையது? என, ஆய்வு செய்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில்…
மேட்ரிமோனி ஆப் மூலம் பல ஆண்களை ஏமாற்றி 1.25 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது
கடந்த 10 ஆண்டுகளாக பல ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.25 கோடியை செட்டில்மென்ட் என்ற பெயரில் வசூலித்து மோசடி செய்த பெண்ணை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் நிக்கி (எ) சீமா, கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் கழித்து கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை பெற்றார். பின்னர் 2017 ஆம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளரை சீமா திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ரூ.10 லட்சத்தை செட்டில்மென்டாக பெற்று கொண்டார். இதனையடுத்து அவர் 2023 இல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள…
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தேநீர் விநியோகம் செய்த பயணி
இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நடுவானில் பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் வழங்குவதற்கு இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் எந்த விமான பாதையில் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உ.பி.யில் பயங்கரம்காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலி
முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கும் இளைஞரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.மேலும், அந்த இளைஞருக்கு வெறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக முசாபர்நகரில் உள்ள ஓட்டலில் காதலனும் காதலியும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளம்பெண் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு காதலின் அந்தரங்க உறுப்பை வெட்டியதோடு தனது கையையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய இளம்பெண்ணை கைது செய்தனர்.
பாப்கார்னுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி ஏன்?.. நிர்மலா சீதாராமன் கொடுத்த புதுவித விளக்கம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 55-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானில் வைத்து நடைபெற்றது. இதில் உப்பு மற்றும் மசாலா கலந்த பிராண்டட் அல்லாத பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி, முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பிராண்டட் பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி. சர்க்கரை கலந்த கேரமல் பாப்கார்னுக்கு 18%.ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் ஒன்றையும் கொடுத்தார். அதாவது, பாப்கார்னை [கேரமல் பாப்கார்ன்] சர்க்கரையுடன் கலக்கும்போது, அதன் மூலக்கூறு தன்மை சர்க்கரை மிட்டாயாக மாறுகிறது. எனவே சர்க்கரை மிட்டாய்க்கு ஒப்பாக பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார். இந்த விளக்கம் நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி கிண்டல் கேலிக்கு…
தள்ளுமுள்ளுவின்போது நடந்தது என்ன? ராகுலிடம் விசாரணை நடத்த முடிவு-காமிரா காட்சிகள் ஆய்வு
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தள்ளு முள்ளுவில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து பாராளுமன்ற சாலை போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ராகுல் காந்தி வேண்டும் என்றே தள்ளிவிட்டதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைய நேரிட்டது என்று குறிப்பிடப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற சாலை போலீசார் 5 பிரிவுகளில் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரிவு 117 (படுகாயம் ஏற்படுத்துதல்), 125 (பிறர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல்), 131 (குற்றவியல் பலவந்தப்டுத்துதல்), 351 (வன்முறை), பிரிவு3 (5) (உள்நோக்கத்துடன் செயல்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற சாலை போலீசாரிடம் பா.ஜ.க. தலைவர்கள் பிரிவு 109 (கொலை முயற்சி) சட்டத்தின்படி ராகுல் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார்கள். ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை. என்றாலும் ராகுல் மீது…
இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக டெல்லி விஜய் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். மேலும், நேற்று பாஜக எம்பிக்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் பேசும்போது, “நேற்றைய நிகழ்வு என்பது வேண்டும் என்றே மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே செல்ல முடியதாவாறு அவர்கள் படிகளில் நின்று கொண்டு மறித்தார்கள். நானே அதைப் பார்த்தேன். அவர்கள் எவ்வாறு தடுக்க முற்படலாம்?” என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேருக்கு நேர் நின்று கோஷங்களை எழுப்பியது குறித்துப் பேசிய பாஜக எம்.பி சி.பி.ஜோஷி, “இது ஜனநாயகத்தை அவமதிக்கும்…
மாநிலங்களவையும் அமளியால் முடக்கம்.. முடிவுக்கு வந்தது குளிர்கால கூட்டத்தொடர்
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, “எதிர்க்கட்சிக ளுக்கு அம்பேத்கர் பெ யரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கி றது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத் தில் இடம் கிடைத்து இருக்கும்” என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அம்பேத்கரை அமித்ஷா அவமரியாதை செய்து விட்டதாக கூறி குற்றம் சாட்டினார்கள். இதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் இழிவுப்படுத்தி இருப்பதாக ஆவண ஆதா ரங்களுடன் பா.ஜ.க. தலை வர்கள் தகவல்களை வெளியிட்டனர். இதையடுத்து அம்பேத்கர் தொடர்பான பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. நேற்று பாராளுமன்ற வளாகத்தில்…
காற்று மாசு காரணமாக தொடர்ந்து அபாய நிலையில் நீடிக்கும் தலைநகர் டெல்லி
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லி காற்று மாசின் அளவு 433 ஆக பதிவானது. இந்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்தில் இருந்து 50 வரை இருந்தால் “நல்லது” என்றும் 51 முதல் 100 வரை இருந்தால் “திருப்திகரமானது” என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் “மிதமானது” என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் “மோசமானது” என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் “மிகவும் மோசமானது” என்றும் 400 முதல் 500 வரை இருந்தால் “அபாயகரமானது” என்றும் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று டெல்லியில் காற்றின் தரம் அபாயகர அளவில் இருந்தது. அங்கு இன்றைய வெப்பநிலை 7.5 டிகிரி செல்ஷியஸ் ஆக…