போபாலில் இருந்து பிதாம்பூருக்கு நச்சுக் கழிவை மாற்றியதற்கு எதிர்ப்பு போராட்டகாரர்கள் மீது போலீசார் தடியடி

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1984-ம் ஆண்டு கார்பைடு தொழிற்சாலையில் இருந்து வெளியான விசவாயுவால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 வருங்கடகளாக நச்சுக் கழிவு அங்கேயே சேமித்து வைக்கப்பட்டிருந்தது. சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை தொழிற்சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவை 12 கண்டெய்னர்கள் மூலம் தார் நகரில் உள்ள பிதாம்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவு 12 பிரத்யேக கண்டெய்னர்கள் மூலம் பிதாம்பூர் கொண்டு செல்லப்பட்டது. அதேவேளையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மற்றொரு நகருக்கு கொண்டு செல்லப்படுவது என்ன நியாயம்?. அதை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய பிரதேச…

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனையில் கரைப்பு!

மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் இன்று(டிச. 29) கரைக்கப்பட்டது. அன்னாரது உடல் தில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நேற்று(டிச. 28) தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எரிவூட்டப்பட் அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட அஸ்தி சீக்கிய மரப்புப்படி இன்று கரைக்கப்பட்டது. இதற்காக மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கௌர், அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் குருத்வாரா அருகே யமுனை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள அஸ்தி படிக்கரைக்கு இன்று காலை சென்று அங்கு யமுனை நதியில் கரைத்தனர். தில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, நாட்டின் முதல் சீக்கிய பிரதமராகப் பதவி வகித்த…

குஜராத்தில் ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்சி மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.07 மணியளவில் பச்சாவ் நகரின் வடகிழக்குப் பகுதிக்கு 18 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று கட்ச் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது கட்ச் மாவட்டத்தில் இந்த மாதம் ஏற்பட்ட 3 வது நிலநடுக்கமாகும். இதற்கு முன்னர், டிச. 7 அன்று 3.2 ரிக்டர் அளவிலும், டிச. 23 அன்று 3.7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. கடந்த நவம்பர் 15 அன்று குஜராத்தின் பதான் நகரில் 4.2 ரிக்டர் அளவிலும், நவம்பர் 18 அன்று கட்ச் மாவட்டத்தில் 4 ரிக்டர்…

உலகில் மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழி- ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையாகும்.- வானொலியில் பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 117-வது நிகழ்ச்சி இன்று ஒலி பரப்பானது. இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ உரையில் மோடி பேசியதாவது:- அடுத்த ஆண்டு முதல்முறையாக உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கிறது. மீடியா, பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான்கள், படைப்பாற்றல் உலகைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன மரபுடன் இணைக்க ஏதுவாக constitution75.com என்ற பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனமே நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது. உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையாகும். இது எங்களுக்கு பெருமையான விஷயம். உலக நாடுகளில் தமிழ்மொழியை கற்று கொள்பவர்களின்…

இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு டெல்லியில் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, பிரதமராக நாட்டை வழிநடத்தியவா் மன்மோகன் சிங். இந்திய பொருளாதார சீா்திருத்தங்களின் சிற்பியாக விளங்கிய அவா், முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் வியாழக்கிழமை காலமானாா். அரசியல் பாகுபாடின்றி தலைவா்கள் அஞ்சலி: இதைத்தொடா்ந்து அவரின் உடல் தேசிய கொடியால் போா்த்தப்பட்டு மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா்…

நாடு முழுதும் ரூ.66.11 கோடி மோசடி வடநாட்டை சோ்ந்த 3 பேர் கைது புதுச்சேரி இணையவழி போலீசார் அதிரடிநடவடிக்கை

இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் ரூ. 66.11 கோடி மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகம்மை; டாக்டர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரிடம் கடந்த ஜூன் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, ஆன்லைன் மோசடி கும்பல் போன் செய்தது. அவர்கள் அழகம்மையின் பெயரை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி, மிரட்டி, அவரிடம் இருந்து 27 லட்சம் ரூபாயை பறித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணையை துவக்கினர். இதில் டாக்டர் அழகம்மை வங்கி கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கு யாருடையது? என, ஆய்வு செய்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த வங்கி கணக்கில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில்…

மேட்ரிமோனி ஆப் மூலம் பல ஆண்களை ஏமாற்றி 1.25 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது

கடந்த 10 ஆண்டுகளாக பல ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.25 கோடியை செட்டில்மென்ட் என்ற பெயரில் வசூலித்து மோசடி செய்த பெண்ணை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் நிக்கி (எ) சீமா, கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் கழித்து கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை பெற்றார். பின்னர் 2017 ஆம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளரை சீமா திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ரூ.10 லட்சத்தை செட்டில்மென்டாக பெற்று கொண்டார். இதனையடுத்து அவர் 2023 இல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள…

நடுவானில் இண்டிகோ விமானத்தில் தேநீர் விநியோகம் செய்த பயணி

இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் பயணி ஒருவர் சக பயணிகளுக்கு தேநீர் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நடுவானில் பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் வழங்குவதற்கு இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் எந்த விமான பாதையில் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உ.பி.யில் பயங்கரம்காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலி

முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கும் இளைஞரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.மேலும், அந்த இளைஞருக்கு வெறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக முசாபர்நகரில் உள்ள ஓட்டலில் காதலனும் காதலியும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளம்பெண் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு காதலின் அந்தரங்க உறுப்பை வெட்டியதோடு தனது கையையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய இளம்பெண்ணை கைது செய்தனர்.

பாப்கார்னுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி ஏன்?.. நிர்மலா சீதாராமன் கொடுத்த புதுவித விளக்கம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 55-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானில் வைத்து நடைபெற்றது. இதில் உப்பு மற்றும் மசாலா கலந்த பிராண்டட் அல்லாத பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி, முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பிராண்டட் பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி. சர்க்கரை கலந்த கேரமல் பாப்கார்னுக்கு 18%.ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் ஒன்றையும் கொடுத்தார். அதாவது, பாப்கார்னை [கேரமல் பாப்கார்ன்] சர்க்கரையுடன் கலக்கும்போது, அதன் மூலக்கூறு தன்மை சர்க்கரை மிட்டாயாக மாறுகிறது. எனவே சர்க்கரை மிட்டாய்க்கு ஒப்பாக பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார். இந்த விளக்கம் நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி கிண்டல் கேலிக்கு…