பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரொக்கப் பணம் ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டத. இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: முதன்மை செய்திகள்
சிறுமி உயிரிழப்புக்கு காரணமான – பள்ளி முதல்வர் ஆசிரியர் உள்பட 3 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது. இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, யுகேஜி வகுப்பு ஆசிரியை…
போபாலில் இருந்து பிதாம்பூருக்கு நச்சுக் கழிவை மாற்றியதற்கு எதிர்ப்பு போராட்டகாரர்கள் மீது போலீசார் தடியடி
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1984-ம் ஆண்டு கார்பைடு தொழிற்சாலையில் இருந்து வெளியான விசவாயுவால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 வருங்கடகளாக நச்சுக் கழிவு அங்கேயே சேமித்து வைக்கப்பட்டிருந்தது. சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை தொழிற்சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவை 12 கண்டெய்னர்கள் மூலம் தார் நகரில் உள்ள பிதாம்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவு 12 பிரத்யேக கண்டெய்னர்கள் மூலம் பிதாம்பூர் கொண்டு செல்லப்பட்டது. அதேவேளையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மற்றொரு நகருக்கு கொண்டு செல்லப்படுவது என்ன நியாயம்?. அதை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய பிரதேச…
உதவியாளரை தரக்குறைவாக ஒருமையில் பேசிய அமைச்சர்! பன்னீர்செல்வம்
தஞ்சாவூரில் விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தன் உதவியாளரை தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் அமைந்துள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று(ஜன. 3) தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் விழாவில் வேளாண் துறை அமைச்சர் பேசத் தொடங்கும்போது தனது உதவியாளரை நோக்கி, “பரசுராமன் எங்கே, எருமை மாடாடா நீ, பேப்பர் எங்கே?” என்று கேட்டதும், உதவியாளர் குறிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், அந்த பேப்பரை கையில் அவரிடமே தூக்கிப்போட்டுவிட்டார். இதனால் விழாவில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
பள்ளி சிறுமி உயிரிழப்பு- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்-நிவாரண நிதி அறிவிப்பு
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) த/பெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது…
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சந்திப்பு!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன. 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு சந்தித்து அழைப்புவிடுத்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 6 ஆம் தேதி திங்கள்கிழமை, காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அழைப்பு விடுத்துள்ளார் பேரவைத் தலைவர் அப்பாவு. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக கடந்த டிச. 9-ஆம் தேதி இரண்டு நாள்கள் சட்டப்பேரவை கூடியது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் புதியவகை கொரோனா மெடாநியுமோ வைரஸ்
சீனத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்எம்பிவி அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்எம்பிவி எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பே இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், இதுவரை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையாலோ அல்லது உலக சுகாதார அமைப்பாலோ அறிவிக்கப்படவில்லை. பொதுவாகவே குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிவது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அது என்ன ஹியூமன் மெடாநியூமோவைரஸ்?இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ 2001ஆம் ஆண்டு. இது பாதித்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு…
அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது ஜனநாயகமா?: விஜய்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், “எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர்,…
புத்தாண்டு கொண்டாட்டம் வனத்துறை கட்டுபாடு
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா, மாயார், மசினகுடி, சிறியூர் மற்றும் பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்கள் மலையடிவார பகுதியில் இருக்கும் வனங்களுக்கு சென்று அங்கு தீ மூட்டுவது, மது அருந்திவிட்டு ஆடிப் பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற பகுதிகளில் ரிசார்ட்கள் மற்றும் காட்டேஜ்களில் அதிக சத்தத்துடன் மேற்கண்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டையொட்டி பட்டாசுகள் வெடிக்கவும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும், கேம்ப் பயர் மற்றும் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தவும் வனத்துறையினர் இந்தாண்டும் வழக்கம்போல தடை விதித்து உள்ளனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக…
தென்கொரியா: விமான விபத்து பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு
தென்கொரியாவில் நடந்த விமான விபத்தின் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய தீயணைப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி எரிந்து பயங்கர புகை கிளம்பியது. விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேறுவதற்குள்ளாக விமானம் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. “இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர், 120 பேர் பலியாகியுள்ளனர்” என்று தென்கொரியாவின் தேசிய தீயணைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பறவைகள் மீது மோதல் மற்றும் வானிலை காரணங்களால் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் ஒரு…