புதுச்சேரி அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை இணைந்து நியாய ஒளி திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் விஜய் வரவேற்புரை வழங்கினார் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் நோக்க உரையாற்றினர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை தலைவர் மரக்கன்றுகள் நட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உதவி…
Category: புதுச்சேரி
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் . லட்சுமி சௌஜன்யா, தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் இவ்வாரம் மக்கள் மன்றம் நிகழ்ச்சி காரைக்கால் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர். லட்சுமி சௌஜன்யா. தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மரி கிறிஸ்டியன் பால், சிறப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் குமார், உதவி ஆய்வாளர்கள் முருகன், குமரன் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இன்றைய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது புகார்களை எழுத்து வடிவமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்தனர். மேலும் மது அருந்திவிட்டு தந்தை வீட்டில் உள்ள அனைவரையும் அடித்து துன்புறுத்துவதாகவும், முதியவர்களிடம் நகை…
புதுச்சேரியில் 11வது சர்வதேச யோகா தின விழா
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை, ஆயுஷ் இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் ஆகியவை இணைந்து நடத்திய 11வது சர்வதேச யோகா தின விழா – 2025, கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவிற்கு தொடக்கத்தை வழங்கினர். தொடர்ந்து யோகாசனம் பயிற்சி செய்தனர்.
தர்மாபுரி ஸ்ரீ அங்காளம்மன்ஆலய திருப்பணிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடைஎதிர்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் வழங்கப்பட்டது
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட தருமாபுரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு இந்திராநகர் திமுக பிரமுகர் பசுபிக் சங்கர் ஆலய திருப்பணிக்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையை, மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான . சிவா முன்னிலையில் வழங்கினார். தொடர்ந்து ஆலய திருப்பணிகளை பார்வையிட்டார். தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள் ஆலய அறங்காவலர் குழு தலைவர் முருகன், நிர்வாகிகள் தன்ராஜ், சரவணன், ரகு, குமரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர்கள் வடிவேலு, சக்திவேல், தியாகராஜன், நிர்வாகிகள் ஆறுமுகம், பிரபு, சுப்பிரமணியன், செல்லதுரை, தேவநாதன், பாலு, பாஸ்கர், பூபாலன், ஜெகதீஷ், கோதண்டம், ராஜா, ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜா உடனுறை அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய 136-வது ஆண்டு தேரோட்டம்
புதுச்சேரி பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜா உடனுறை அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய 136-வது ஆண்டு தேரோட்டத்தை நூற்று 100-க்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்தனர் புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜர் உடனுறை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 136-வது பிரமோற்சவ விழா கடந்த 25-ம் தேதி விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகாசூரன் வதம், திருக்கல்யாணம் மற்றும்அம்மனுக்கு பல்வேறு அபிஷேக் ஆராதனைகள் நடைபெற்றது. 6-வது நாள் உற்சாகமான இன்று திரௌபதி அம்மனின் திரு தேரோட்டம் நடைபெற்றது கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புறப்பட்ட திரௌபதி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்க 100-க்கனக்கான மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தேரானது முக்கிய விதிகள் வீதி உலா வந்து மீண்டும் கோவில் பிரகாரத்தை வந்தடைந்தது.தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.…
விபத்தில் சிக்கி மூலச் சாவடைந்த இளம் பெண்ணின்உடல் உறுப்பு தானம் 7 பேர் பயன்பெற்றனர்
விபத்தில் சிக்கி மூலச் சாவடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அதன் மூலம் 7 பேர் பயன் அடைந்துள்ளதாக மருத்துவர் முருகேசன் தெரிவித்தார் தனது சகோதரி இல்லையென்றாலும் அவருடைய இதயம் எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது மனதுக்கு ஆறுதலாக இருப்பதாக உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்தவர் செல்வ கணபதி -சீதா தம்பதியினர், இவர்கள் கடந்த 11-ம் தேதி தனது இரண்டு குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூரில் உள்ள கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பி பேட்டை பாலத்தின் அருகே வரும் பொழுது திடீரென ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வ கணபதி, மற்றும் அவருடைய 3 வயது குழந்தை சம்பவ…
அரிசி டெண்டரில் முதலமைச்சரின் அனுமதியோடு மிகப்பெரிய ஊழல் முறைகேடுகள்
புதுச்சேரியில் வழங்கப்படும் விலையில்லா ரேசன் அரிசி டெண்டரில் முதலமைச்சரின் அனுமதியோடு மிகப்பெரிய ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசியில் முதலமைச்சரின் துணையோடு பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். விலையில்லா அரிசிவிநியோகத்தில் முறையாக டெண்டர் விடுவது போல் நாடகமாடி, தனக்குசாதகமான ஒரு வடநாட்டுக் கம்பெனியுடன் கூட்டு சேர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியின் துணையோடு அதிகாரிகள்கொள்ளையடித்து வருவதாக கண்டனம் தெரிவித்தார். அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடியால் புதுச்சேரி மாநில விவசாயிகளோ அரிசி ஆலை உரிமையாளர்களோ மக்களோ எந்தவித பயணம் அடையவில்லை அதற்கு மாறாகபுதுச்சேரியில் தற்போதுரேஷனில் வழங்கப்படும் அரிசி 100 சதவீதம் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால்புதுச்சேரிக்கு 20…
பட்டியலின மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டம் ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு
மத்திய அரசின் ஒத்துழைப்போடு தான் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை என்றும் பட்டியலின மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டம் ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பேசியுள்ளார். புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2.0, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதன் திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரி மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 16 சதவீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் முழுமையான நிதியை பெற்று நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 16…
இந்தியாவில் வேலைக்கு ஆளெடுக்கும் டெஸ்லா..பணிகள் தொடங்கியது
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் ‘லிங்க்ட் இன்’ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய…
சிங்கார வேலர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி சபாநாயா மாலையணிவிப்பு
சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது புதுச்சேரி, கடலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன் சட்டமன்ற தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார்,காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன்,திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கட்சி தலைவர் சிவா,முன்னாள் அமைச்சர் எஸ்,பி,சிவகுமார்,…