வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கடும் மழையை பெய்துவருகிறது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. திரிகோணமலையின் கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
Category: புதுச்சேரி
புதுச்சேரியில் 28-வது தேசிய புத்தகக் கண்காட்சி டிசம்பர் மாதம் 13ஆம் முதல் 10 நாள் நடக்கின்றது
புத்தக கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 70 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்கின்றனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. கண்காட்சியில் 15 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்குத் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. கண்காட்சியில் இடம்பெறும் நூல்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ்களும், ஆயிரம் மடங்கில் நட்சத்திர சான்றிதழ்களும் வழங்கப்படும்.10 ஆயிரத்திற்கு மேல் புத்தகம் வாங்குவோர்களுக்கு புத்தக சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. அனுமதி இலவசம். ஏற்பாடுகளை புத்தக…
புதுச்சேரி அரசின் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 2025ம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் 17 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஆணைப்படி, புதுச்சேரி அரசு விடுமுறை நாள்கள் கவர்னர் ஒப்புதலின் பேரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவா் தினம், மார்ச் 31ம் தேதி ரம்ஜான், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு, 18ம் தேதி ஏப்ரல் புனித வெள்ளி, மே 1ம் தேதி மே தினம், ஜூன் 7ம் தேதி பக்ரித் பண்டிகை, ஆகஸ்ட்1௫ம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 16ம் தேதி டிஜுரே டிரான்ஸ்பர் தினம், ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் மாதம் 5ம் தேதி மிலாடி…
புதுவை மணவெளி தொகுதி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு கடன் உதவி சட்டப்பேரவை தலைவர் செல்வம் வழங்கினார்
மணவெளி தொகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு கடன் உதவிக்கான காசோலைகளை சட்டப்பேரவை தலைவர் செல்வம் வழங்கினார். புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மணவெளி தொகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி கடன், நலிவுற்றோர் நிதி கடன், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்துவோர் சிறப்பு கடன், வங்கி இணைப்பு கடன் மற்றும் துவக்க நிதி என ரூ. 1 கோடியே 56 லட்சம் கடனுதவிக்கான காசோலைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் 205 பயனாளர்களுக்கு தவளகுப்பத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன் செயல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி…
40 ஆண்டுகள் தனியார் வசம் இருந்தரூ. 100 கோடி மதிப்புடைய கோவில் நிலம் மீட்பு
அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ. செங்கழுநீர் அம்மன் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் 11.5 ஏக்கர் நிலம் முதலியார் பேட்டை வேல்டராம்பட்டில் 40 ஆண்டுகள் தனியார் குத்துகைதாரர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை மூலம் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரப்பட்டு குமார் 40 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்கை அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்(எ)தட்சிணாமூர்த்தியின் பெரும் முயற்சியால் வீராம்பட்டினம் திருப்பணிக்குழு மக்கள் குழு ஆகியோரின் ஆதரவுடன் சுமார் 100 கோடி பொறுமான நிலம் மீட்டக்கப்ட்டது. புதுச்சேரி வருவாய்த்துறை வட்டாட்சியர் பிரித்திவிராஜ், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்(எ)தட்சிணாமூர்த்தி கோவில் தனி அதிகாரி சுரேஷ், வீராம்பட்டினம் மக்கள் குழு, திருப்பணிக்குழு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டு வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது இதில் முதலியார்…
முதியோர் உதவித் தொகைக்கான அடையாள அட்டைஎதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
புதுச்சேரி அரசின் மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 161 பயனாளிகளுக்கு முதியோர், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.இந்நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.இதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் அமுதா, நல ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன்,…
புதுவை பெத்துசெட்டிப்பேட்டை சிவசுப்பிரமணியர் கோயிவில் தங்க தேர் செய்யும் பணிஆளுநர் தொடங்கி வைத்தார்
புதுவை பெத்துசெட்டிப்பேட்டை சித்தி விநாயகர்,சிவசுப்பிரமணியர் கோயிலில் தங்க தேர் செய்யும்பணி தொடக்க விழாஇன்று காலை நடந்தது.விழாவில் சிறப்புஅழைப்பாளராக ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டார். அவருக்குகோயில் நிர்வாக அதிகாரிபிரபாகரன் தலைமையில்பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்துகோயிலில் கவர்னர் சாமிதரிசனம் செய்தார்.அதன் பிறகு தங்கதேர் செய்யும் பணியைகவர்னர் கைலாஷ்தாதன்பூஜை செய்து பணியைதொடங்கிவைத்தார். இந்ததங்க தேர் 12 1/2 அடி உயரத்தில் தேக்கு மரத்தில் செப்பட்டு செப்புத்தகடு பதித்து, அதல் 600 பவுன் தங்க முலாம் பூசப் பட உள்ளது. இதன் மதிப்பு 4 கோடியாகும்.நிகழ்ச்சியில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகர்சிவகொழுதந்து, திருப்பணிக்குழு தலைவர் மணி,உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, தண்டபாணி, மணி,மோகன்ராஜ், முருகவேல்,அண்ணாதுரை, மதியழகன், முருகவேல், செல்வகணபது, ராமநாதசுவாமி, உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழாசிலைக்கு ஆளுநர் முதல்வர்- காங்கிரசார் மாலையணிவிப்பு
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் கைலாஷ்நாதன்,முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்தனர்.அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,தேனீ.ஜெயக்குமார், சாய்சரவணன் துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏகேடி ஆறுமுகம், பாஸ்கர்(எ)தட்சணாமூர்த்தி,ரமேஷ்,லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, முன்னாள் அமைச்சர் வல்சராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கள் நீலகங்காதரன், அனந்தராமன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, கருணாநிதி, வக்கீல் மருதுபாண்டியன், ஆர்.இ. சேகர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகளிர் காங் தலைவி பஞ்சகாந்தி உள்ளிட்ட பலர்…
புதுவை வீராம்பட்டிணத்தில் ரூ. 46.16 கோடியில் புதிய மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணி-முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி.நவ.4- புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் அரியாங்குப்பம், அடுத்த வீராம்பட்டினம் மீனவர் கிராமத்தில் தேங்காய்திட்டு அருகே அரிக்கன்மேடு சுற்றுலா தளத்தை ஒட்டியுள்ள மீன்பிடி துறைமுக கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசின் நிதி வழங்கும் திட்டமான பிராதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை முலம் ரூபாய்.53 கோடியே 38 லட்சம் அனுமதி பெறப்பட்டது. அதில் ரூ.46 கோடியே 16 லட்சம் செலவில் கட்டிட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்ற தட்சிணாமுர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை செயலர் ஜெய்ந்தகுமார், தலைமைப்…
பாவேந்தர் பாரதிதாசனார் மகனார்தமிழறிஞர் மன்னர்மன்னன் பிறந்த நாள் விழா !
பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் “பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா”பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.பாரதிதாசன் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் 97 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுப்“புரட்சிக்கவிஞர் போற்றிய மைந்தர் மன்னர்மன்னன்!” என்ற தலைப்பிலான 72 ஆவது மாத விழாவுக்குஅறக்கட்டளைத் தலைவர் தமிழறிஞர் கோ. பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிறிஞர் மன்னர்மன்னன் திருவுருவப் படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர், வி.பி. சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ரெவே சொசியால் சங்கத் தலைவர் துபாய் குழந்தை, திண்டிவனம் தாகூர் கல்விச் சங்க நிர்வாகிகள் ரவீந்திரநாத், தேவேந்திரநாத், கொஜிரியோ கராத்தே சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், காந்திநகர் நல வாழ்வுச் சங்கத்தினர், கலை பண்பாட்டு துறை இயக்குநர் வி. கலியபெருமாள் கலை முதியோர் இல்லம்…