கொட்டும் மழையில்முதல்வரின் வீட்டின் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்

புதுச்சேரி கல்வித்துறையில் ஒப்பந்த முறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரியும் 288 தமிழ் ஆசிரியர்கள்,பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாலை 7 மணி முதல் முதல்வர் வீட்டின் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில், பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 288 பேர் முதல்வர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர். அப்போது, அப்பா பைத்தியசாமி கோவிலில், முதல்வர் பூஜை செய்து கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்ற ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து, நாங்கள் 5 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் முதல்வர்…

இந்திராகாந்தி அரசு கல்லூரியின்கழிவறை மேற்கூரை இடிந்து மாணவி விழுந்து படுகாயம்மாணவர்கள் சாலைமறியல்

புதுச்சேரி.அக்.15-அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், கழிவறையின் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்ததில் மாணவி படுகாயமடைந்தார். இதனைக் கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது. கல்லுாரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். அங்கு, இடம் பற்றாக்குறை காரணமாக கோரிமேடு, இந்திரா நகர் அரசு பள்ளி வளாகத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கல்லுாரியின் மைக்ரோ பையாலஜி, 2ம் ஆண்டு பயிலும் மாணவி நேற்று மதியம் 1:00 மணி அளவில் மாணவிகள் கழிவறைக்கு சென்று உள்ளார். அப்போது, மழையின்…

கோவில் நில மோசடி வழக்கு- காரைக்கால் துணை ஆட்சியர் கைது

காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சான் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி கோவில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர்…

வில்லியனூர் தொகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: எதிர்க்கட்சித் தலைவர் . சிவா துவக்கி வைத்தார்

புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், குளத்துமேடு மற்றும் வி.மணவெளி வழியாக செல்லும் வாய்க்கால்களை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் மூலம் ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் இன்று துவங்கியது.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு தூர்வாரும் பணிகளை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், தொகுதி அவைத் தலைவர் ஜலால் அணிப், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை சங்கத் தலைவர் அங்காளன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தேசிகன், ஆதிதிராவிடர் அணி துணைத்…

புதுவை மணவெளி தொகுதி கொருக்குமேட்டில் ஆட்டோ ஸ்டாண்டு திறப்பு

புதுச்சேரி அக்.8-மணவெளி தொகுதி தவளக்குப்பம் கொருக்குமேடு பகுதியில் உள்ள சீனிவாசா அப்பார்ட்மெண்ட் பகுதியில் செல்வம் மக்கள் இயக்கம் சார்பாக புதிய ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா நடைபெற்றது. இந்த ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஸ்டாண்ட் சங்க நிர்வாகிகள் பாஜக மாவட்ட தலைவர் சுகுமார் துணைத் தலைவர் மணிகண்டன் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி அரசு தொடக்கபள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்றலின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அந்த வகையில் எல்லைப்பிள்ளைசாவடியில் அமைந்துள்ள அரசு தொடக்கபள்ளியில் அறிவியல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் நடந்த அறிவியல் கண்காட்சியை விழாவினை எஸ். எம். சி. தலைவர் திலகவதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இரண்டு பிரிவாக நடந்த நிகழ்ச்சியில் காலையில் முன் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கலர்ஸ் கிளே கொண்டாட்டத்தில் அனைத்து விதமான வண்ணங்களும், பொருட்கள், ஆடைகள், பூக்கள், கட்அவுட், மிட்டாய்கள், பொம்மைகள் மற்றும் பழங்களை கொண்டு காட்சிக்கு வைத்த விதம் பெற்றோர்களையும் பொது மக்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனை பொறுப்பாசிரியர் எழிலரசி மற்றும் சுப்புலட்சுமி செய்திருந்தனர். மாலையில் அறிவியல் கண்காட்சி பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.…

குரங்கு பெடல்‌’ திரைப்படத்திற்கு‌ புதுவை அரசின்‌சங்கரதாஸ்‌ சுவாமிகள்‌ விருது ரூ. 1 லட்சம் பரிசுமுதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து, ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகின்றன. இந்த விழாவில் ஒரு சிறந்த தமிழ் படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு ‘குரங்கு பெடல்’ படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. குரங்கு பெடல்’ படம் ஒரு சிறுவனின் சைக்கிள் கனவை சொல்லும் படமாக உருவாகி இருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்குவிருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குநர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலாளர் கேசவன், அலையன்ஸ்பிரான்சேஸ் தலைவர் சதீஷ்நல்லாம்,நவதர்ஷன் திரைப்படகழகத்தின் செயலாளர் பழனி, ஆகியோர் வாழ்த்தினர். விழாவில், குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக் கண்ணனுக்கு விருது வழங்கி…

புதுவை பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை நாளை தொடங்குகிறது

மத்திய திருப்பதி என்றழைக்கப்படும்‌ பஞ்சவடி தலத்தில் எழுந்தருளியுள்ளஸ்ரீ வாரி வெங்கடாஜலபதி சன்னதியில்‌ புரட்டாசி சனிக்‌ கிழமைகளில்‌ கோலாகலவைபவங்கள்‌ தொடர்பாக தலைவர்‌ மற்றும்‌ நிர்வாக அறங்காவலர்‌ .கோதண்டராமன்‌ தெரிவித்திருப்பதாவது: திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வழக்கம்போல்‌ இவ்வாண்டு மிகவும்‌ கோலாகலமாக நடைபெற சிறப்பான ஏற்பாடுகள்‌செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி 21.09.2024 முதல்‌ சனிக்‌ கிழமை விசேஷ பழங்களினால்‌ அலங்காரம்‌28.09.2024 இரண்டாம்‌ சனிக்கிழமை சந்தனக்‌ காப்பு அலங்காரம்‌03.10.2024 வியாழக்‌ கிழமை விசேஷ திருப்பாவாடை ஸேவை 05.10.2024 மூன்றாம்‌ சனிக்கிழமை முத்தங்கி சேவை12.10.2024 நான்காம்‌ சனிக்கிழனை பூவங்கி சேவை ஆகியவை நடைபெறும்.புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும்‌ விசேஜா அலங்காரப்‌ பந்தலில்‌ உற்சவர்‌ ஸ்ரீ…

அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர் உடல் 25 நாட்களுக்கு பிறகு புதுவை வந்தது

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்காவின் ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி, குழந்தைகள் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இதற்கிடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 21-ந்தேதி மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். அதன் பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியை கொன்று கணவரும் தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் ஆதரவற்று இருந்தனர். அவர்களை அங்குள்ள தமிழர்கள் பராமரித்து வந்தனர். பின்னர்…

புதுவை அதிமுக முன்னால் அவை தலைவர் பாண்டுரங்கன் நினைவு நாள் படதிறப்பு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னால் அவை தலைவர் பாண்டுரங்கன் நினைவு நாள் அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடந்தது. ரவி பாண்டுரங்கன் தலைமையில் மதிப்பிற்குரிய பாண்டுரங்கம் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தொகுதி கழக செயலாளர் ராஜா மாநில துணை செயலாளர் பிஎல் கணேசன் அவைத்தலைவர் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் பாலன் மாநில அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் பரசுராமன் அதிமுக பிரமுகர் ஜீவா வார்டு கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், சிவரவி, பாலு, ரங்கநாதன், ஜெயக்குமார் மாநில இலக்கிய அணி தட்சிணாமூர்த்தி மற்றும் தொகுதி கழக நிர்வாகிகள் கோபி, செல்வம், சரவணன், சிவா, சிவபாரதி, ஆறுமுகம், ஏழுமலை, நாராயணன், காண்டீபன், சையது அகமது, ராமலிங்கம் , கலைச்செல்வம், நாகப்பன், குமரன், பாரதி,…