புதுவை அரசு வேளாண்‌ துறை மூலம் காய்கறி விதை தொகுப்பு முதலமைச்சர்‌ ரங்கசாமி வழங்கினார்‌

புதுவை அரசு வேளாண்‌ துறைதோட்டக்கலை பிரிவின்‌ மூலம்‌புதுவையில்‌ தோட்டக்‌ கலைபயிர்‌ சாகுபடியை அதிகரிக்கபல்வேறு திட்டங்கள்‌செயல்படுத்தப்பட்டுவருகிறது.நகர, கிராமப்புற மக்களுக்கு தேவையான காய்‌கறிகளை அவர்களே வீட்டுபுறக்கடை, மாடியில்‌ சாகுபடிசெய்ய ஊக்குவிக்கப்பட்டுவருகின்றனர்‌.இதன்‌ ஒரு பகுதியாககாய்கறி தோட்டம்‌ அமைக்கரூ.200 மதிப்புள்ள காய்கறிவிதைகள்‌ அடங்கிய தொகுப்புஆடி பருவத்தில்‌ இலவசமாகவழங்கப்படுகிறது.வேளாண்‌ அமைச்சர்‌ தேனீ.ஜெயக்குமார்‌முன்னிலையில்‌சட்டசபையில்‌விதைகள்‌அடங்கியதொகுப்பைமுதலமைச்சர்‌ ரங்கசாமிபயனாளிகளுக்கு வழங்கிதிட்டத்தை தொடங்கிவைத்தார்‌.நிகழ்ச்சியில்‌ நலத்துறைஇயக்குனர்‌ வசந்தகுமார்‌,கூடுதல்‌ வேளாண்‌ இயக்குனர்‌ஜாகீர்‌ உசைன்‌, துணைவேளாண்‌ இயக்குனர்‌ சண்முகவேலு மற்றும்‌ அதிகாரிகள்‌ பலர்‌ கலந்துகொண்டனர்‌. காய்கறி விதை தொகுப்பு முதலமைச்சர்‌ ரங்கசாமி வழங்கினார்‌

புதுவை ஆண்டியார்பாளையத்திற்கு மீண்டும் பேருந்து சேவை சபாநாயகர் தொடங்கிவைத்தார்

மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் கொருக்கமேடு வழியாக ஆண்டியார்பாளையம்  செல்லும் பி ஆர் டி சி  மினி பஸ் சேவையானது பேருந்து பற்றாக்குறை காரணமாக  கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.சட்டப்பேரவை தலைவர் செல்வம் கொருக்கமேடு ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதி மக்களின் நலன் கருணை பி ஆர் டி சி அதிகாரிகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுத்து மேற் சொன்ன வழித்தடத்தில் மீண்டும் மினி பஸ் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர்  நேற்று ஆண்டியார்பாளையம் பகுதியில் இருந்து இந்த மினி பஸ் சேவையை தொடங்கி வைத்து அப்பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்தார்.இந்த நிகழ்ச்சியில் பிஆர்டிசி பொது மேலாளர்  கலியபெருமாள் மேலாளர்  ராதாகிருஷ்ணன் மற்றும் அப்பகுதி முக்கிய நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சுகுமாரன் ஜி.ஆர். செந்தில் ஜி ரமேஷ்…

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் முப்பெரும் விழா-கருத்தரங்கம் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

புதுவைத் தமிழ்‌ச் சங்கத்தில்‌மறைமலை அடிகளார்‌,வாணிதாசன்‌, மன்னர்‌மன்னன்‌ ஆகியோரை பற்றிய பாவரங்கம்‌,கருத்தரங்கம்‌, விருதளிப்பு நிகழ்ச்சி நடந்தது.சங்க தலைவர் முனைவர்‌ முத்து தலைமை தாங்கினார்‌. செயலாளர்‌ சீனு.மோகன்தாசு வரவேற்‌றார்‌. பொருளா ளர்‌ அருள்செல்வம்‌, துணைதலைவர்‌  திருநாவுக்கரசு,துணை செயலாளர்‌ தனகரன்‌ முன்னிலை வகித்தனர்‌. பாவரங்கத்துக்குசங்க துணை தலைவர்‌ஆதிகேசவன்‌ தலைமைதாங்கினார்‌. கருத்தரங்கில்‌ மறைமலையடிகளின்‌மகன்‌ வழி பெயர்த்தி கவிஞர்‌ கலைச்செல்வி சிறப்புரையாற்றினார்‌. பிரெஞ்சு கல்வித்துறையில்‌ ஓய்வுபெற்றபேராசிரியர்‌ சண்முகசுந்‌தரம்‌, முனைவர் கோ.பாரதி மற்றும்‌ கவிஞர்கள்‌,தமிழறிஞர்‌ கள்‌ கலந்து கொண்டனர்‌.

புதுச்சேரி வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு கல்வீடு கட்ட தவணைத் தொகை ஆணை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார் !

புதுச்சேரி அரசின் ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 14 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல் கட்ட தவணையாக ஒரு நபருக்கு ரூபாய் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் 30 லட்சத்து 80 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் நடந்தது. இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை தலைவர்…

புதுவை வில்லியனூர் அம்பேத்கார் சிலைக்கு குடை அமைப்பு

புதுச்சேரி அரசின், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபேட்டில் அமைந்துள்ள சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ரூபாய். 24 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் படிக்கட்டுகளுடன் கூடிய ஸ்டெயின்லஸ் ஸ்டீல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு குடை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், ஆதிதிராவிடர் வரைநிலை மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குனர் சிவக்குமார், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் இளங்கோவன், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் திருவருட்செல்வன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஹரிகிருஷ்ணன், கனகசுப்புராயன், குமார், அங்காளன், பழனிசாமி, கலியமூர்த்தி, தயாளன், அஞ்சாப்புலி, அன்புநீதி, அன்பழகன், குமாரதேவன், ஏழுமலை, கதிரவன், செல்வராசு, ரமேஷ், மனோகர், தாஸ், எழில், ரஜினி, தமிழ், விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், வேல்முருகன், சுந்தர், வடிவேல், அம்பேத், உலகநாதன், தக்ஷிணாமூர்த்தி, அன்பரசன், பிரவீன்,…

தமிழக ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியை பார்வையிட்டார் புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரேசன் கடைகள் மூடப்பட்டன. ரேசன் கடைகளில் வழங்கி வந்த இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் ரேசன் கடைகளை புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணியை துரத்தி துரத்தி கடித்து குதறிய நாய் திறந்து இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. அரசியல் கட்சிகளும் ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன. நடந்து முடிந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் ரேசன் கடைகளை எப்போது திறப்பீர்கள்? என பெண்கள் கேள்வி எழுப்பினர். அப்போது விரைவில் ரேசன்கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். இதையடுத்து கடந்த 7 ஆண்டாக மூடிக்கிடக்கும் ரேசன்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான கோப்புக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்…

இந்த பட்ஜெட் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும்‌ முதல்வர் ரங்கசாமி பாராட்டு

சமுதாயத்தின்‌ அனைத்து தரப்பிரினரின்‌வாழ்க்கை நிலையை மேம்படுத்தும்‌ பட்ஜெட்முதலமைச்சர்‌ ரங்கசாமி பாராட்டு புதுச்சேரி, ஜூலை. 24-புதுவை முதலமைச்சர்‌ ரங்கசாமிவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌கூறியிருப்பதாவது:மத்திய நிதி அமைச்சர்‌ நிர்மலாசீதாராமன்‌ நாடாளுமன்றத்தில்‌ இன்று தாக்கல்‌ செய்த பட்ஜெட்‌ ஏழைகள்‌, பெண்கள்‌. இளைஞர்கள்‌, விவசாயிகள்‌ எனசமுதாயத்தின்‌ அனைத்து தரப்பிரினரின்‌ வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதாகவும்‌ நாட்டின்‌வளர்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான பிரதமரின்‌ உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதாகவும்‌ அமைந்துள்ளது.விவசாய மேம்பாட்டிற்காகரூ.1.52 கோடி ஒதுக்கி யிருப்பதும்‌. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அடுத்த 2ஆண்டுகளில்‌ 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கஇருப்பதும்‌, வேளாண்மையை டிஜிட்டல்‌ மயமாக்கி, வேளாண்‌உற்பத்தி மற்றும்‌ விற்பனைத்‌திறனை மேம்படுத்த நடவடிக்கைஎடுக்க இருப்பதும்‌, நாட்டின்உணவு தேவையில்‌ தன்னிறைவுஅடைய உதவும்‌ என்பதில்‌ஐயமில்லை. பெண்கள்‌ மற்றும்‌சிறுமி களுக்கு பயனளிக்கும்‌திட்டங்களுக்காக பட்ஜெட்டில்‌ ரூ.3லட்சம்‌ கோடிக்கு மேல்‌ ஒதுக்கீடுசெய்யப்பட்டிருப்பது பெண்கள்‌தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும்‌. பொருளாதாரவளர்ச்சியில்‌ பெண்களின்‌ பங்கைமேம்படுத்துவதில்‌ பாரதப்‌ பிரதமர்‌ தலைமையிலானதேசிய ஜனநாயகக்‌ கூட்டணிஅரசின்‌ அர்ப்பணிப்பைக்‌ காட்டுவதாகவும்‌…

புதுச்சேரி பட்ஜெட் தாமதத்திற்கு யார்காரணம்முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி.ஜூலை.23-புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி  அவரது இல்லத்தில்  பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: பட்ஜெட் நிதிக்கு முதல்வர் ரங்கசாமி ஆளுநர் தலைமையில் முடிவெடுத்து கோப்பு தயாரித்து ஜூன் முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதுவரை அந்த கோப்பு என்ன ஆனது எப்பொழுது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ளனர் என்பது புரியாத புதிராக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது ரங்கசாமி காலத்தோடு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை என்று விமர்சனம் செய்தார். இப்பொழுது மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் என யாரை ரங்கசாமி விமர்சனம் செய்வார். காலதாமதர்க்கு யார் காரணம்? இதுவரை ஒப்புதல் இல்லை. நான் முதல்வராக இருந்த பொழுது மத்திய பாஜக அரசு எந்த அளவு ஒத்துழைக்கவில்லையோ அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. ரங்கசாமி பாஜகவோடு கூட்டணியில் உள்ளார். கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். கூட்டணி…

புதுச்சேரி வில்லியனூர் ஜி.என். பாளையம்ரூ. 24 லட்சம் செலவில் கருமாதி கொட்டகை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தா

ர் ! வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.என்.பாளையம்பேட் பகுதியில் உள்ள கருமாதி கொட்டகையை புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ரூபாய். 23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் மற்றும் மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்ற காலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு கருமாதி கொட்டகை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், ஊர் முக்கியஸ்தர்கள் வீரக்கண்ணு, ராமஜெயம், பழனி, தங்க கதிர்வேல், சந்தோஷ், தெய்வநாயகம், புவனேஷ், முருகையன், ஆனந்து, ரகு, முத்து, அருண், செந்தில், விஜயரங்கம், மனோ, சக்திவேல், வெங்கடேஷ், ரமா, விஜி, வினோதினி, பவானி, மாசிலாமணி மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன்,…

புதுச்சேரி மணவெளி தொகுதியில் 3 இடங்களில்தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் தொடக்கம்

புதுச்சேரி அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி தொகுதியில்3 இடங்களில்  100 நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டது. இதில் ஆண்டியார்பாளையம் தவளக்குப்பம் மற்றும் டி என் பாளையம்  ஆகிய  பகுதிகளில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.52 லட்சம் மதிப்பிலான  பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்  சட்டப்பேரவைத் தலைவருமான  செல்வம்  அந்தந்த பகுதிகளில் நேரில் சென்று தொடங்கி வைத்தார். ஆண்டியார்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்க் முதல் உப்பனாறு வரை உள்ள அல்லிக்குட்டை வாய்க்காலை ரூ.06.23 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல்,  தவளக்குப்பம் பகுதியில் ஈசிஆர் முதல் பள்ளி வாசல் வரை உள்ள வாய்க்காலை ரூ.05.37 லட்சம் மதிப்பில் தூர் வாரி ஆழப்படுத்துதல், மற்றும் டி.என் பாளையம் பகுதியில் ஏரி  வரை உள்ள மலட்டாறு வாய்க்காலை ரூபாய் 10.92 லட்சம்…